Search Results for: 3

Here are the search results for your search.

News, Uncategorized

அநுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து: மரத்தில் மோதி ஆசிரியர் உயிரிழப்பு

அநுராதபுரம் மாவட்டத்தின் இபலோகம, கலாவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இபலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலாவெவ – புளியங்குளம் வீதியின் பிம்பார பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் முதலில் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அநுராதபுரம் கலாவெவ பகுதியைச் சேர்ந்த […]

Local News, News

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 12 இலட்சத்தைத் தாண்டினர்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை (1.2 மில்லியன்) கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் ஜூலை 12 வரை நாட்டிற்கு மொத்தம் 1,217,956 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூலை 1 முதல் 12 ஆம் திகதி வரையிலான 12 நாட்களில் மட்டும் 71,383 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

News, World News

பிரான்ஸ் செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை: பயங்கரவாதம் முதல் காட்டுத்தீ வரை பல்வேறு அபாயங்கள்

பிரான்சுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் கனேடியர்களுக்கு அந்நாட்டு நிலைமைகளை கருத்தில் கொண்டு புதிய பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல், காட்டுத்தீ அபாயம், திருட்டு சம்பவங்கள் மற்றும் கடுமையான வானிலை நிலைமைகள் ஆகியவற்றை முன்னிட்டு இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் அரசு ட்ரோன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதுடன், முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அதிகரித்துள்ளது. அதேவேளை, அதிக வெப்பம் காரணமாக ஈபிள் கோபுரம் முன்கூட்டியே மூடப்பட்டுள்ளதுடன்,

Cinema, News

இயக்குநரிலிருந்து நடிகராக ஜேசன் சஞ்சய்? திரையுலகில் புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளதாக தகவல்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில், அடுத்த கட்டமாக நடிகராகவும் திரையுலகில் பயணிக்கத் தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தந்தை விஜய்யின் பாதையைப் பின்பற்றி, ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகும் வாய்ப்பு குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஜேசன் சஞ்சய் நடிக்க ஏற்ற கதைகளைத் தேர்வு செய்யும் பணியில் லைகா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாகுவது தொடர்பாக

News, World News

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் தாக்கத்தால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்வை பதிவு செய்து வருகின்றன. சமீபத்திய சந்தை நிலவரத்தின்படி, Brent ரக மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 86.91 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 80.48 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக,

Local News, News

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: 200 பேரிடம் வாக்குமூலம்; ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசேட விசாரணை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்ளிட்ட சுமார் 200 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய விசேட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன்,

News, World News

ஜோர்தானின் பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளம் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல்

ஜோர்தானில் அமைந்துள்ள பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளத்தை குறிவைத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக முழுமையாக வெளியிடப்படாத நிலையில், தாக்குதலின் தன்மை, ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக ஜோர்தான் மற்றும் ஈரான் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், பிராந்திய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக சர்வதேச தரப்பினரும் உன்னிப்பாக அவதானித்து

Local News, News

நீர்கொழும்பு சிறைக் கூரையில் போராடிய பெண் கைதி குறித்து வைரலான ‘வைத்தியபீட மாணவி’ கதை – உண்மையல்ல என உறுதி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் “வைத்தியபீட மாணவி” என்ற உருக்கமான பின்னணிக் கதை முற்றிலும் கற்பனையானது என உண்மைக் கண்டறியும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் 29 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தச் சம்பவத்தின் போது

News, Uncategorized

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்தி மோசடி – பொதுமக்களுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடும் இணைய மோசடி தொடர்பில் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலிருந்து அனுப்பப்பட்டதாகத் தோன்றும் இந்த குறுஞ்செய்திகளில், வீதிப் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டு, அதற்காக சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவ்வாறான எந்தவொரு அறிவிப்பையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிடவில்லை என்றும், பரவி வரும்

Local News, News

பரீட்சைக்குப் பிறகு ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது மாணவர் காணாமல் போனார் – தீவிர தேடுதல் நடவடிக்கை

லிந்துலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்றபோது காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள், ஓல்ரிம் பகுதியில் உள்ள கொத்மலை ஆற்றுக்கு நீராடச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. நீராடிக் கொண்டிருந்தபோது, 9 மாணவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில்,

Scroll to Top