June 2026

Astrology, News

இன்றைய ராசி பலன் 30 ஜூன் 2026

இன்று ஜூன் 30, 2026 ஆனி மாதம் 16ம் தேதி செவ்வாய்க் கிழமை, தனுசு ராசியில் மூலம், பூராடம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கடகத்தில் சுக்ரன் – குரு – புதன் ஆகிய திரிகிரகி சேர்க்கை யோகமும், கஜலட்சுமி யோகம் உருவாகிறது. இன்று ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று 30ஜூன் 2026 செவ்வாய்க் கிழமை, பராபவ வருடம், ஆனி மாதம் 16ம் தேதி தனுசு ராசியில் […]

Astrology, News

இன்றைய ராசி பலன் 29 ஜூன் 2026 

இன்று 29 ஜூன் 2026 திங்கட் கிழமை, பராபவ வருடம், ஆனி மாதம் 15ம் தேதி தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று தன யோகம் ஏற்படக்கூடிய நாள். மிதுனத்தில் சூரியன் – புதன் சேர்க்கை நன்மை தரும். மிதுனத்தில் சூரியன் – தனுசுவில் சந்திரன் நன்மைகள் வாரிவழங்கும். பலவிதத்தில் நன்மைகள் தரும். இன்று மேஷ, ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று பெளர்ணமி.

News, World News

இந்தியா–இலங்கை பயணிகள் கப்பல் சேவை மேம்பாடு; நாகப்பட்டினத்தில் வரிவிலக்கு கடைகள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைந்துள்ள சர்வதேச பயணிகள் முனையத்தில் வரிவிலக்கு (Duty Free) விற்பனை வசதிகளை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாகப்பட்டினம்–காங்கேசன்துறை கப்பல் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், துறைமுகத்தில் வழங்கப்படும் சேவைகளை சர்வதேச விமான நிலையம் மற்றும் கடல்சார் முனையங்களுக்கு இணையான தரத்தில் மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு கடல்சார் சபை (TNMB)

News, World News

இலங்கையின் விமானப் போக்குவரத்தில் புதிய மைல்கல்; வியட்நாமிலிருந்து நேரடி சேவை

இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை வலுப்படுத்தும் வகையில், புதிய நேரடி விமான சேவையை ஆரம்பிக்க வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் ஹோ சி மின் நகரத்திற்கும் கொழும்பிற்கும் இடையே வாரத்திற்கு மூன்று முறை நேரடி விமான சேவை இயக்கப்படவுள்ளது. வியட்நாமின் தேசிய விமான சேவை நிறுவனமான வியட்நாம் ஏர்லைன்ஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பிராந்திய இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த சேவையை

News, World News

உலக எரிசக்தி சந்தையில் விலை உயர்வு; பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் இன்று (29) மேலும் உயர்வைப் பதிவுசெய்துள்ளன. சர்வதேச சந்தைத் தரவுகளின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 69.86 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் Brent ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 72.31 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேநேரம், இயற்கை எரிவாயுவின் விலையும் அதிகரித்துள்ளதுடன், அதன் விலை 3.309 அமெரிக்க

Local News, News

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை; புதிய சட்டத் திருத்தம் முன்மொழிவு

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு விதிக்கப்படும் தண்டனைகளை கடுமையாக்கும் வகையில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் கீழ், தற்போது நடைமுறையில் உள்ள 10,000 ரூபாய் அபராதத்தை 1 இலட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டமூலம் வழிவகை செய்கிறது. அத்துடன், வழக்கின் தன்மை மற்றும் குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து, குற்றவாளிகளுக்கு அபராதம், சிறைத்

Local News, News

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவு; சந்தையில் புதிய திருப்பம்

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், இன்று (29) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,065.95 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.75 அமெரிக்க டொலராக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு தங்கச் சந்தையில் விலைகள் ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவு இலங்கையின் தங்கச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, தங்கத்தின் விலையில்

News, Uncategorized

இன்று பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; 50 மி.மீ. வரை மழை பதிவாகலாம்

இன்று (29) நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊவா மாகாணத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Local News, News

ஆறு ஆண்டுகளில் 2.67 இலட்சம் மாணவர்கள் பள்ளிக் கல்வியை கைவிட்டனர்; அதிர்ச்சி தகவல் வெளியீடு

2018 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுகளில் மொத்தம் 267,138 மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2018–2024 காலப்பகுதிக்கான வருடாந்திர பாடசாலை மாணவர் தொகைக் கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் தரம் முதல் பத்தாம் தரம் வரை ஒவ்வொரு வகுப்பிலும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும், கல்வியை இடைநிறுத்தியோரின் விகிதங்களும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கீட்டு முறையின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, 2018 ஆம் ஆண்டில்

News, World News

அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் பதவி விலகும் செர்பிய ஜனாதிபதி

செர்பியாவில் கடந்த 18 மாதங்களாக நீடித்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச் இன்னும் சில வாரங்களில் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் முன்கூட்டியே ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்ற ஆதரவாளர்களின் பேரணியில் உரையாற்றிய வுசிச், “இன்னும் சில வாரங்கள் மட்டுமே நான் ஜனாதிபதியாக இருப்பேன். அதன் பின்னர் பதவியை இராஜினாமா செய்வேன்” என அறிவித்தார். 2027

Scroll to Top