Sports News

News, Sports News

புதிய விதியின் கீழ் களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!

பிரேசில் சீரி ஏ கால்பந்து தொடரில் கோல் காப்பாளர்கள் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்கும் வகையில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதியின் கீழ், ஒரு நிமிடத்திற்கு களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் என்ற பெயரை சாண்டோஸ் அணியின் தலைவர் நெய்மர் பெற்றுள்ளார். புதிய விதியின்படி, ஆட்டத்தின்போது கோல் காப்பாளர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் போது 1 நிமிடத்துக்கு ஒரு வெளிக்கள வீரரை களத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதற்காக […]

News, Sports News

ரகசியமாக போட்டி பார்க்க வந்த மெஸ்ஸி; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்குப் பின்னர், ஆர்ஜென்டீனா அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸி முதன்முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆர்ஜென்டீனாவின் ரொசாரியோ நகருக்கு அருகிலுள்ள அரோயோ செகோ (Arroyo Seco) பகுதியில் நடைபெற்ற ‘பிரைமேரா சி’ (Primera C) நான்காம் தர லீக் போட்டியொன்றை பார்வையிடுவதற்காகவே மெஸ்ஸி அங்கு சென்றுள்ளார். மெஸ்ஸியின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் லியோன்ஸ் எஃப்.சி (Leones FC) அணிக்கும் சென்ட்ரல் கோர்டோபா அணிக்கும் இடையிலான போட்டியை, அவர்

News, Sports News

மெதுவான ஓவர் வீதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அபராதம் மற்றும் புள்ளிகள் குறைப்பு

அன்டிகுவா மற்றும் பார்புடாவின் நோர்த் சவுண்டில் நடைபெற்ற இலங்கை–மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஓவர்களை பூர்த்தி செய்யத் தவறியதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தண்டனை விதித்துள்ளது. இதன்படி, மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களின் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரில் அந்த அணியின் மொத்தப் புள்ளிகளில் இருந்து 2 புள்ளிகள் கழிக்கப்பட்டுள்ளன. இந்தத் தண்டனையை ஐசிசியின் எலைட் பேனல்

News, Sports News

காலி முதல் கொழும்பு வரை… இந்தியா–இலங்கை டெஸ்ட் தொடருக்கு கவுண்டவுன் ஆரம்பம்!

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025–2027) தொடரின் ஒரு பகுதியாக, இந்திய ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த தொடருக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலி சர்வதேச கிரிக்கெட்

News, Sports News

கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து; நொக்-அவுட் சுற்று போட்டிகள் அறிவிப்பு

கால்பந்து கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமான ‘சுப்பர் 32’ சுற்றுக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றில் உலகத் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் பல முன்னணி அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜேர்மனி – பராகுவே, பிரான்ஸ் – சுவீடன், தென்னாபிரிக்கா – கனடா, நெதர்லாந்து – மொரோக்கோ, போர்த்துக்கல் – குரோஷியா, ஸ்பெயின் –

News, Sports News

பரபரப்பான மோதலில் உருகுவே, கேப் வேர்ட் அணிகள் சமநிலை

உலகக் கால்பந்து கிண்ணத் தொடரின் ‘H’ பிரிவு லீக் போட்டியில் உருகுவே மற்றும் கேப் வேர்ட் அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையைப் பதிவு செய்தன. மியாமியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 21ஆவது நிமிடத்தில் கேப் வேர்ட் அணியின் கெவின் பினா முதல் கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதற்கு பதிலடி கொடுத்த உருகுவே அணி முதல் பாதியின் இறுதி நேரத்தில் சிறப்பாக விளையாடியது. 44ஆவது நிமிடத்தில் எம். அரவுஜோ கோல்

News, Sports News

T20 உலகக் கிண்ணத்தில் இந்தியா–அவுஸ்திரேலியா தோல்வியின்றி முன்னேற்றம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 10ஆவது ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இலகுவான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. இந்த வெற்றிகளுடன் குழு 1 இல் தோல்வியின்றி விளையாடி வரும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை உறுதிப்படுத்தும் நிலைக்கு மேலும் வலுப்பெற்றுள்ளன. இந்தியா 95 ஓட்டங்களால் வெற்றி லீட்ஸ் ஹெடிங்லேயில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா

News, Sports News

இலங்கையை 2–1 என வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்

ஜமைக்கா கிங்ஸ்டன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி சர்வதேச T20 போட்டியில் இலங்கையை 5 விக்கெட்களால் வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள், தொடரை 2–1 என கைப்பற்றியுள்ளது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், 2 பந்துகள் மீதமிருக்கையில் மேற்கிந்தியத் தீவுகள் இலக்கை எட்டியது. இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. துனித் வெல்லாலகே 43 ரன்களும், காமில் மிஷார 28 ரன்களும், பெத்தும் நிஸ்ஸன்க 26 ரன்களும், கமிந்து

News, Sports News

ருமேஷ் தரங்க சாதனை: ஈட்டி எறிதலில் உலகின் 3ஆவது இடம்

. உலக தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் உலக தரவரிசையில், இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க உலக அளவில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் பங்கேற்ற அவர், 92.62 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய இலங்கை தேசிய சாதனையையும், போட்டி சாதனையையும் பதிவு செய்திருந்தார். இந்தச் சிறந்த செயல்திறனின் மூலம், ருமேஷ் தரங்க உலக தரவரிசையில் மொத்தம் 1,324 புள்ளிகளைப்

News, Sports News

15 வயதில் இந்திய அணிக்கு தேர்வு: சச்சின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி

15 வயதிலேயே இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணிக்குள் நுழைந்த மிக இளைய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை முறியடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் வாழ்த்துத் தெரிவிக்க வந்த பொதுமக்கள் திரண்டுள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து இந்திய ஊடகத்துக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில், வைபவ்வின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி

Scroll to Top