August 2026

Cinema, News

மகன் ஆத்விக்கின் கால்பந்து வெற்றியை நிழற்படங்களுடன் கொண்டாடிய ஷாலினி

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினரின் மகன் ஆத்விக் அஜித், பாடசாலை மட்டத்திலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். மகனின் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகை ஷாலினி அஜித், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆத்விக்குடன் எடுத்துக்கொண்ட நிழற்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள நிழற்படங்களில், வென்ற கிண்ணம் மற்றும் பதக்கத்துடன் ஆத்விக், தனது தாயார் ஷாலினியுடன் மகிழ்ச்சியாகக் காட்சியளிக்கிறார். இந்த நிழற்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அஜித்தின் ரசிகர்கள் மற்றும் […]

News, Sports News

புதிய விதியின் கீழ் களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!

பிரேசில் சீரி ஏ கால்பந்து தொடரில் கோல் காப்பாளர்கள் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்கும் வகையில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதியின் கீழ், ஒரு நிமிடத்திற்கு களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் என்ற பெயரை சாண்டோஸ் அணியின் தலைவர் நெய்மர் பெற்றுள்ளார். புதிய விதியின்படி, ஆட்டத்தின்போது கோல் காப்பாளர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் போது 1 நிமிடத்துக்கு ஒரு வெளிக்கள வீரரை களத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதற்காக

News, World News

விஜய்யின் ரசிகன் எனக் கூறிய நாசா விஞ்ஞானி: மாணவர்களை ஆச்சரியப்படுத்திய செயல்

நாசா நிகழ்வில் வைரலான முதலமைச்சர் விஜய்யின் கை சைகை தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், நாசா விண்வெளி நிலையத்தின் பிரபல விஞ்ஞானி மருத்துவர் டோன் தோமஸ் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, நாசா விண்வெளி நிலையத்தின் சென்னை கிளை பிரதம நிறைவேற்று அதிகாரி காயம்பு இராமலிங்கம், தமிழக முதல்வர் விஜய் தொடர்பாக மருத்துவர் டோன் தோமஸிடம் கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த மருத்துவர் டோன் தோமஸ், தான் தமிழக

News, World News

ஈ. ஜீன் கேரொல் வழக்கு: ட்ரம்ப்பின் மறுபரிசீலனை மனுவை மீண்டும் நிராகரித்த அமெரிக்க உயர் நீதிமன்றம்

எழுத்தாளர் ஈ. ஜீன் கேரொலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு வழங்க உத்தரவிட்ட சிவில் வழக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீட்டை மீண்டும் பரிசீலிக்கக் கோரிய மனுவை அமெரிக்க உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கேரொல் வழக்கில் ட்ரம்ப்புக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை பரிசீலிக்க அமெரிக்க உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் மறுத்திருந்தது. இதையடுத்து, அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ட்ரம்ப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், நீதிமன்றம் எந்தவொரு

News, World News

60 நாள் ஒப்பந்தம் நிறைவு: ஈரான்-அமெரிக்கா இடையே மீண்டும் தீவிர பதற்றம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தின் 60 நாள் காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடனான நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில், ஈரான் தனது இராணுவத்தை “முழுமையான தாக்குதல்” நிலைக்கு மாற்றத் தயாராகி வருவதாக அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை எதிர்கொள்ள துல்லியமான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்க நேரிடும்

News, Uncategorized

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளதுடன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக, 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் நீதித்துறை தொடர்பான ஏற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்வதுடன், நீதித்துறை அமைப்பு சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்

Local News, News

உலக சாதனைப் பதிவுக்கு பரிசீலனை: திருகோணமலையில் அகற்றப்பட்ட பாரிய சிறுநீரகக் கல்

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 3.1 கிலோகிராம் எடையுடைய பாரிய சிறுநீரகக் கல், உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கற்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 52 வயதுடைய ஆண் ஒருவரின் சிறுநீரகப் பையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் கல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. சுமார் 21 சென்டிமீற்றர் நீளமும் 3 கிலோ 100 கிராம் எடையும் கொண்ட இந்தக் கல், நோயாளி நீண்டகாலமாக சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை

Local News, News

சட்டவிரோத பணப்பரிமாற்றம்: நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் விளக்கமறியலில்

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள பணப் பரிமாற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், குறித்த பணப் பரிமாற்ற நிறுவனம் மூலம் பெருமளவிலான பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக நிதி குற்றப்

News, World News

அவுஸ்திரேலியாவில் 7.5 இலட்சத்துக்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சந்தேகத்திற்குரிய 7.56 இலட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, இதுவரை சுமார் 4.62 இலட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகளையும், 2.94 இலட்சம் ஃபேஸ்புக் கணக்குகளையும் செயலிழக்கச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சிறார்களின் உடல் மற்றும் உளநலப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

News, World News

இந்தியாவில் கரையை நோக்கி அதிவேகமாக சென்ற பாரிய கப்பல்: அலறியடித்து ஓடிய மக்கள்

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த ‘MV Nawata Bhum’ என்ற பாரிய சரக்குக் கப்பல், இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றின் கரையில் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் நேற்று (13) காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவின் கிளாங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட குறித்த கப்பல், கொல்கத்தாவில் அமைந்துள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திடீர்

Scroll to Top