September 2026

Cinema, News

ரவி மோகனின் தெலுங்கு அறிமுகம் – ரசிகர்களை கவர்ந்த புதிய போஸ்டர்

நடிகர் ரவி மோகன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தற்போது ‘கராத்தே பாபு’, ‘ஜீனி’, ‘பென்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரவி மோகன் நேற்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு, […]

News, World News

சிரேஷ்ட பிரஜைகளுக்கு 5,000 டொலர்கள்? – ட்ரம்பின் அறிவிப்பால் அமெரிக்காவில் பரபரப்பு

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு தலா 5,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் சட்டபூர்வத்தன்மை மற்றும் நிதி ஏற்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வாக்காளர்களின் முடிவை நேரடியாகப் பாதிக்கும் வகையில் பணம் வழங்குவது அமெரிக்க சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகக் கருதப்படலாம். எனினும், குறித்த திட்டம் நேரடி

News, World News

முதலாவது வெளிநாட்டு பயணம்: லண்டன் சென்ற முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணமாக இன்று (11) லண்டன் சென்றடைந்துள்ளார். தமிழகத்தின் பொருளாதாரத்தை 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தும் இலக்கின் ஒரு பகுதியாக, சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட முதலமைச்சர் விஜய், துபாய் வழியாக லண்டன் சென்றுள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி வரை லண்டனில் தங்கியிருக்கும் அவர், பல்வேறு தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து

News, Uncategorized

இலங்கையை வாட்டும் வறட்சி: ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழப்பு

எல் நினோ தாக்கத்தால் நிலவும் கடும் வறட்சி காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களில் 25,037 குடும்பங்களைச் சேர்ந்த 78,368 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி நாடாளுமன்றத்தில் நேற்று (10) தெரிவித்தார். மொனராகலை, பதுளை, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த வாழ்வாதாரப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. வறட்சியின் தாக்கத்தால் விவசாயம், பெருந்தோட்டம், கடற்றொழில், சுயதொழில், வணிகம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக

Local News, News

பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த அரசாங்கம் உறுதி – பிரதமர்

பொதுப் போக்குவரத்தை பொதுமக்களுக்கு வசதியானதும் பாதுகாப்பானதுமான பயணத் தெரிவாக மாற்றுவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். “கனவு இலக்கு” (Dream Destination) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பொது இடங்கள் மற்றும் பயண வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் மக்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொதுப் போக்குவரத்து துறைக்கான

News, World News

உணவுப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய பிபாஷா பாசு – அதிகாரிகள் விசாரணை

ஆரோக்கிய பால்மாவில் புழுக்கள் காணப்பட்டதாக பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறித்த காணொளி மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிபாஷா பாசு, சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி துகாராம் முண்டேவை பதிவில் குறிப்பிட்டுள்ளார். நுகர்வோர் கொள்வனவு செய்யும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகாரிகள்

Local News, News

வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு: இரு சிறார்கள் உயிரிழப்பு, தந்தை படுகாயம்

தெஹிவளை, கவுடான பகுதியில் உள்ள சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறார்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் இடம்பெற்ற வேளையில், இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டின் மீது கைக்குண்டொன்றை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Scroll to Top