Search Results for: 3

Here are the search results for your search.

News, World News

அமெரிக்கா தாக்கினால் செங்கடல் முடக்கப்படுமா? ஹூதிகளுக்கு ஈரான் ரகசிய அறிவுறுத்தல் என தகவல்

அமெரிக்கா, ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், செங்கடல் வழியாக நடைபெறும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தைத் தடுக்கத் தயாராக இருக்குமாறு ஏமனின் ஹூதி அமைப்புக்கு ஈரான் அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஈரானின் உயர்மட்ட தலைமைத்துவத்தில் விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றதாகவும் அந்தத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான அறிவுறுத்தல்கள், ஈரானுடன் நெருங்கிய தொடர்புடைய ஹூதி அமைப்புக்கு ஏற்கனவே […]

News, World News

வெனிசுவேலா இரட்டை நிலநடுக்கம்: உயிரிழப்பு 4,829 ஆக உயர்வு – மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய தகவல்களின்படி, இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 16,740 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, நிலநடுக்கத்தின் காரணமாக 17,907 பேர் தங்களது வீடுகளை முழுமையாக இழந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Local News, News

கனடா, லக்சம்பர்க் வேலைவாய்ப்பு மோசடி: ரூ.8 மில்லியன் பெற்றதாக சந்தேகநபர் கைது

கனடா மற்றும் லக்சம்பர்க் நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, ஐந்து பேரிடம் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாய் மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் (14) வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவையைச் சேர்ந்த 38 வயதுடைய ஃபைஸ் முகமது நஃப்திகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புலனாய்வுகளின்படி, யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கனடா மற்றும் லக்சம்பர்க் நாடுகளில்

Local News, News

நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவுக்கு பசுமை எரிசக்தி மேம்பாட்டு திட்டம்– அரசின் புதிய நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் உள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றை ‘பசுமை சக்தித் தீவுகள்’ (Green Energy Islands) ஆக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். தற்போது இந்த மூன்று தீவுகளிலும் நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy System – HRES) திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, பசுமை எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரிவுபடுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எரிசக்தி அமைச்சின்

Local News, News

டெங்கு அதிகரிப்பு எதிரொலி; தாதியர்களின் சேவைக் காலம் நீட்டிக்க கோரிக்கை

நாட்டில் நிலவி வரும் கடுமையான தாதியர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், ஓய்வு பெறவுள்ள தாதியர்களின் சேவைக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நேற்று (14) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாகவும், வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் கணக்கில்

Local News, News

புகையிலை கலந்த வெற்றிலை விற்பனைக்கு கடும் நடவடிக்கை; நாடளாவிய கண்காணிப்பு தீவிரம்

இலங்கையில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையின் விற்பனையை முற்றாகத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பதிவாகும் புற்றுநோய்களில் வாய் புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதால், அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத் தெரிவித்துள்ளார். புகையிலை கலந்த வெற்றிலையை பயன்படுத்துவது வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக

News, World News

அமெரிக்காவில் கடிகார நேர மாற்றத்துக்கு முற்றுப்புள்ளியா? முக்கிய சட்டமூலம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

அமெரிக்காவில் ஆண்டுதோறும் இருமுறை கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறையை நிறுத்தி, பகல்நேர சேமிப்பு நேரத்தை (Daylight Saving Time) ஆண்டு முழுவதும் அமல்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட முக்கிய சட்டமூலம் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 308 உறுப்பினர்களும், எதிராக 117 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமூலம், அடுத்தகட்டமாக செனட் சபையின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. செனட் சபையிலும் அங்கீகாரம் கிடைத்தால், ஆண்டுதோறும் நவம்பர்

News, World News

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு; இலங்கையிலும் அதிகரிக்க வாய்ப்பு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, இன்று (15) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் உயர்வு பதிவாகியுள்ளது. இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,048.64 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளி 58.65 அமெரிக்க டொலருக்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை

News, Uncategorized

இன்று லேசான மழை எதிர்பார்ப்பு; பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்

நாட்டின் சில பகுதிகளில் இன்று (15) லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மேலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை,

Astrology, News

இன்றைய ராசி பலன் 14 ஜூலை 2026

இன்று 14 ஜூலை 2026 செவ்வாய்க்கிழமை பராபவ வருடம், ஆனி மாதம் 30ம் தேதி மிதுன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று முன்னோர் வழிபாடு செய்ய வேண்டிய நாள். இன்று மிதுனத்தில் சூரியன், சந்திரன், புதன் ஆகிய மூன்று கிரக சேர்க்கை நடக்கிறது. கடகத்தில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இன்று திரிகிரகி யோகம். இன்று விருச்சிக ராசியில் உள்ள அனுஷம், கேட்டை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று

Scroll to Top