Search Results for: 3

Here are the search results for your search.

Astrology, News

இன்றைய ராசி பலன் 10 ஜூலை 2026

இன்று ஜூலை 10, 2026 ஆனி மாதம் 26ம் தேதி வெள்ளிக் கிழமை, ரிஷப ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று அனுமன், குரு வழிபாடு செய்ய வேண்டிய நாள். சிம்மத்தில் சுக்ரன் கேதுவுடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். இன்று தன யோகம், கெளரி யோகம் உருவாகிறது. கன்னி, துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று 10 ஜூலை 2026 வெள்ளிக் கிழமைபராபவ வருடம், ஆனி மாதம் […]

News, World News

12 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு: கைது செய்யப்பட்டவர் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

இந்தியாவில் 12 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். காவல்துறையின் தகவலின்படி, சம்பவம் நடைபெற்ற இடத்தை அடையாளம் காட்டுவதற்காக சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சந்தேகநபரின் தாய், தனது மகன் செய்ததாகக் கூறப்படும் செயலுக்கு ஒருபோதும் மன்னிப்பு இல்லை

News, World News

சீனாவில் காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 28 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு சீனாவின் ஜின்ஜியாங் நகரில் அமைந்துள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் தகவலின்படி, ஜின்ஜியாங் நகரில் இயங்கி வரும் ‘ஹுய்டெங் ஃபுட்வேர்’ (Huiteng Footwear) தொழிற்சாலையில் நேற்று நண்பகல் சுமார் 12.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், 500-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்களும்

News, Uncategorized

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த புதிய ஆயுர்வேத மருந்துகள் அறிமுகம்

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் டெங்கு நோயாளர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் வகையில் இந்த மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் கொன்தசிங்க தெரிவித்துள்ளார். மேலும், மேல் மாகாண ஆயுர்வேத திணைக்களம் புதிய ஆயுர்வேத மருந்தொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அதனை மேல் மாகாணத்திலுள்ள வீடுகளுக்கு விநியோகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Local News, News

கறுவாப்பட்டை விலை கடும் உயர்வு; சந்தையில் புதிய உச்சம்

இலங்கையில் கறுவாப்பட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் கறுவாப்பட்டை 5,000 ரூபாய் முதல் 5,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுவாப்பட்டைக்கான அதிகரித்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கேள்வி, அதேபோல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. சந்தை நிலவரம் மற்றும் ஏற்றுமதி தேவையின் அடிப்படையில் கறுவாப்பட்டை விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும்

Local News, News

களனி கங்கையைப் பாதுகாக்க வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் விசேட வேலைத்திட்டம்

கொழும்பு, கம்பஹா, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வாழும் சுமார் 8 மில்லியன் மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் களனி கங்கையைப் பாதுகாக்கும் நோக்கில், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நுவரெலியா முதல் அம்பத்தலே வரை களனி கங்கையின் 27 இடங்களில் இருந்து நீரைப் பெற்று, சுமார் இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது. இதனுடன், களனி கங்கை

Local News, News

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கடுமையான வன்முறைச் சம்பவங்களையும், அதனைத் தொடர்ந்து பிற சிறைச்சாலைகளில் கைதிகள் மீது சிறைக்காவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பழிவாங்கும் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் ஆழ்ந்த கவலையுடனும் அதிர்ச்சியுடனும் கவனித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் ரவினா ஷாம்தாசனி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டோரின் குடும்பத்தினர்

Cakes.n.cookies

Freshly baked custom cakes, cupcakes & homemade cookies at affordable prices. Making every celebration sweeter with quality, creativity, and unforgettable taste.

News, Sports News

மெதுவான ஓவர் வீதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அபராதம் மற்றும் புள்ளிகள் குறைப்பு

அன்டிகுவா மற்றும் பார்புடாவின் நோர்த் சவுண்டில் நடைபெற்ற இலங்கை–மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஓவர்களை பூர்த்தி செய்யத் தவறியதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தண்டனை விதித்துள்ளது. இதன்படி, மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களின் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரில் அந்த அணியின் மொத்தப் புள்ளிகளில் இருந்து 2 புள்ளிகள் கழிக்கப்பட்டுள்ளன. இந்தத் தண்டனையை ஐசிசியின் எலைட் பேனல்

News, World News

அமெரிக்கா–ஈரான் பதற்றம் எதிரொலி; உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கமாக உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் உயர்வைப் பதிவு செய்துள்ளன. அதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 78.50 அமெரிக்க டொலர் ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று (08) பதிவான விலையை விட 2.50 அமெரிக்க டொலர் அதிகமாகும். அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 74.20 அமெரிக்க டொலர்

Scroll to Top