
டெங்கு பரவல் தீவிரம்: அதி-அபாய வலயங்கள் 84 ஆக உயர்வு
நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் தீவிரமடைந்து, பாரிய தொற்றுநோய் நிலையை எட்டியுள்ளதாக நிர்வாக சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில், நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு அதி-அபாய வலயங்களின் எண்ணிக்கை 74 இலிருந்து 84 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை உள்ளிட்ட […]

