
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்
இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கடுமையான வன்முறைச் சம்பவங்களையும், அதனைத் தொடர்ந்து பிற சிறைச்சாலைகளில் கைதிகள் மீது சிறைக்காவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பழிவாங்கும் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் ஆழ்ந்த கவலையுடனும் அதிர்ச்சியுடனும் கவனித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் ரவினா ஷாம்தாசனி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டோரின் குடும்பத்தினர் […]









