
போர் தயார்நிலை பயிற்சியை ஆரம்பித்த தாய்வான் இராணுவம்
தாய்வான் இராணுவம் இந்த வாரத்தில் தனது “உடனடி போர் தயார்நிலை” (Immediate Combat Readiness) பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி, உண்மையான போர்க்கள சூழ்நிலைகளை உருவகப்படுத்தி, இராணுவத்தினரின் செயல்திறன் மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பமான இந்தப் பயிற்சியில் அனைத்து மட்டங்களிலும் உள்ள இராணுவப் பிரிவுகள் பங்கேற்கவுள்ளதுடன், போர் நடைமுறைகள் மற்றும் அவசரகால பதிலளிப்பு திறன்களை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். […]








