
‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகளை இன்று (18) வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, 1,373,248 பயனாளி குடும்பங்களுக்காக 10,904,801,250 ரூபாய் நிதி இன்று சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவலகெதர, இந்தக் கொடுப்பனவு நடவடிக்கைகள் ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது ‘அஸ்வெசும’ வங்கி கணக்குகள் ஊடாக இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
