
பாடசாலைகளில் வெளிப்புற திட்டங்களுக்கு கட்டுப்பாடு: கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
அரசாங்கத்தின் முறையான அங்கீகாரத்தைப் பெறாத எந்தவொரு திட்டமும் அல்லது செயற்பாடும் எந்தக் காரணத்திற்காகவும் பாடசாலைகளுக்குள் நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடமத்திய மாகாண சபை வளாகத்தில் நேற்று (17) நடைபெற்ற வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர், கல்வி தொடர்பான அனைத்து தீர்மானங்களும் […]









