June 2026

News, World News

ஜே.டி. வான்ஸின் கருத்து உண்மைக்கு புறம்பானது; பிரித்தானியா கடும் மறுப்பு

பிரித்தானிய மாணவர் ஹென்றி நோவக் கொலைச் சம்பவத்தை குடியேற்றவாசிகளுடன் தொடர்புபடுத்தி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது என பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லேமி தெரிவித்துள்ளார். தொலைபேசி உரையாடல் ஒன்றின் போது ஜே.டி. வான்ஸிடம் இதுகுறித்து விளக்கமளித்த டேவிட் லேமி, கடந்த ஆண்டு 18 வயதான ஹென்றி நோவக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த பிரித்தானிய பிரஜையான விக்ரம் திக்வா என்பதையும், அந்தக் […]

Local News, News

2029இலும் அநுர குமாரவே ஜனாதிபதி; மக்கள் ஆணை மேலும் பலப்படும் – வசந்த சமரசிங்க

2029ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி பதவியை அநுர குமார திஸாநாயக்கவே மீண்டும் வகிப்பார் என அமைச்சர் வசந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ரோமேஷ் தரங்க வீசும் ஈட்டியைப் போலவே, தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் இலக்கும் துல்லியமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மக்களின் நம்பிக்கையையும் வலுவான ஆணையையும் பெற்ற அரசாங்கமாக தற்போதைய நிர்வாகம் செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அரசாங்கம் விரைவில் வீழ்ச்சியடையும் என சில தரப்பினர் எதிர்பார்த்து வருவதாகவும் கூறினார். உலகளாவிய பொருளாதார

Local News, News

போதையில் வாகனம் ஓட்டி இரு உயிர்களை காவுகொண்ட சாரதி சிக்கினார்!

ஹங்வெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட எம்புல்கம – பனாகொட வீதியில் இடம்பெற்ற சோகமான வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 6ஆம் திகதி மாலை, எம்புல்கம நோக்கிப் பயணித்த சிற்றூந்து ஒன்று, அதே திசையில் வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மோதியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்துக்குப் பின்னர் குறித்த வாகனம் சம்பவ இடத்தில் நிறுத்தப்படாமல் தப்பிச் சென்றதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இரு பெண்களும் உடனடியாக நவகமுவ மருத்துவமனைக்கு கொண்டு

Uncategorized

“முடிவெடுக்கும் அதிகாரம் என்னிடமே” – நெதன்யாகுவை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

ஈரானுடன் அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தையும் இஸ்ரேல் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும், அதுகுறித்த இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், “முக்கிய முடிவுகளை எடுப்பது நான்தான்; நெதன்யாகு அல்ல. எனவே, அமெரிக்கா எட்டும் ஒப்பந்தத்தை அவர் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறியுள்ளார். அதேவேளை, ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேலை

Local News, News

பெரும்போக நெற்செய்கையில் ட்ரோன் தொழில்நுட்பம்: உள்நாட்டு மென்பொருளுடன் புதிய முன்னேற்றம்!

உலர் வலயப் பகுதிகளில் வரவிருக்கும் பெரும்போக நெற்செய்கை நடவடிக்கைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நெல் விதைப்பு, உர விநியோகம் உள்ளிட்ட முக்கிய விவசாயப் பணிகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் திறம்பட மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் குருகுலவ பகுதியில் அண்மையில் நடைபெற்ற விசேட பயிலரங்கில் இந்தத் திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. பயிலரங்கின் போது, முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டு மென்பொருள் மற்றும்

News, World News

பிலிப்பைன்ஸ் அருகே சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை வெளியீடு

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மிண்டானாவோ தீவுக்கு அருகில் இன்று (8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் ஆழிப்பேரலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GFZ) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் 8.2 ரிக்டர் அளவாக மதிப்பிடப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் வலிமை பின்னர் 7.8 ரிக்டர் அளவாக திருத்தப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவின் புவியியல்

Local News, News

பாடகர் கைது மனவேதனைக்குரியது; அரசியல் வெற்றியாக பார்க்கக் கூடாது – இளங்குமரன்

பிரபல பாடகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இளங்குமரன், இந்த நிகழ்வு சில அரசியல்வாதிகளுக்கு அரசியல் ரீதியாக சாதகமாக இருக்கலாம் என்றாலும், கலை மற்றும் கலாசாரத் துறையினருக்கு அது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கலைஞர் சட்ட சிக்கலில் சிக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமல்ல என்றும், அதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், உண்மைகள் முழுமையாக வெளிவரும் வரை பொறுப்புடன்

News, Sports News

15 வயதில் இந்திய அணிக்கு தேர்வு: சச்சின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி

15 வயதிலேயே இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணிக்குள் நுழைந்த மிக இளைய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை முறியடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் வாழ்த்துத் தெரிவிக்க வந்த பொதுமக்கள் திரண்டுள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து இந்திய ஊடகத்துக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில், வைபவ்வின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி

News, World News

மத்திய கிழக்கு பதற்றம் தொடர்ந்தும் நீடிப்பு: எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் சரிவு

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் மற்றும் பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்று வீழ்ச்சியடைந்துள்ளன. சர்வதேச சந்தைத் தரவுகளின்படி, அமெரிக்காவின் அடிப்படை அளவுகோலான WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 90.54 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, உலகளவில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 93.09 அமெரிக்க டொலராக

News, Sports News

2வது ஒருநாள் போட்டி: நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதன்படி, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடரை சமநிலைப்படுத்தும் நோக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும், முன்னிலையை

Scroll to Top