World News

News, World News

அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு டிரம்ப் உருவப்படத்துடன் புதிய $250 நோட்டு திட்டம்

அமெரிக்கா உருவானதன் 250வது ஆண்டு விழா வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவப்படத்துடன் புதிய 250 டாலர் நாணய நோட்டு அச்சிடும் சாத்தியம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. அமெரிக்க கருவூலத் துறை அதிகாரி பிராண்டன் பீச், கருவூலத் துறை ஊழியர்களுக்கு இதற்கான முன்மாதிரி வடிவங்களை தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்க சட்டத்தின்படி நாணய நோட்டுகளில் பொதுவாக மறைந்தவர்களின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற […]

News, World News

போர்நிறுத்தத்தை மீறி லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

லெபனானுடன் ஏற்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 58 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. மாகாணங்களை இணைக்கும் முக்கியச் சாலையான அஸ்லூன் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.

News, World News

நிலவில் நிரந்தர ஆய்வு தளம்: மூன்று கட்ட திட்டத்தை அறிவித்த நாசா

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் தங்குவதற்கான நிரந்தர ஆய்வு தளம் அமைக்கும் புதிய மூன்று கட்ட திட்டத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில், ஆர்ட்டெமிஸ்–2 திட்டத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றிப் பயணம் செய்து வெற்றிகரமாக திரும்பினர். 54 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் நிலவை நெருங்கிச் சென்ற முக்கிய சாதனையாக இது கருதப்படுகிறது. இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, நிலவில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் மிகப்பெரிய திட்டத்தை நாசா தற்போது

News, World News

மத்திய கிழக்கு பதற்றம் அதிகரிப்பு: உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.75% அதிகரிப்பு ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியை இலக்காகக் கொண்டு அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய்

News, World News

காற்றில் ஆடும் மெஸ்ஸியின் 70 அடி சிலை அகற்ற நடவடிக்கை

பாதுகாப்பு காரணங்களால் கொல்கத்தாவில் பரபரப்பு இந்தியாவில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் Lionel Messi அவர்களின் பிரம்மாண்ட சிலை தற்போது பாதுகாப்பு காரணங்களால் அகற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிலை கடந்த ஆண்டு டிசம்பரில், Kolkata நகரில் திறந்து வைக்கப்பட்டது. உலகக் கோப்பையை உயர்த்திப் பிடித்திருக்கும் வடிவில் அமைக்கப்பட்ட இந்த தங்க நிற சிலை சுமார் 21 மீட்டர் (70 அடி) உயரம் கொண்டதாகும். பரபரப்பான சாலையோரத்தில் அமைந்துள்ள இந்த சிலை பலத்த

News, World News

20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாம்பழங்களுக்கு மீண்டும் தடை

ஜப்பான் எடுத்த அதிரடி முடிவால் ஏற்றுமதி பாதிப்பு 1986ஆம் ஆண்டு பழ ஈக்கள் அச்சுறுத்தலை காரணமாகக் கொண்டு இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதித்திருந்தது. பின்னர் 2006ஆம் ஆண்டு அந்தத் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய மாம்பழங்கள் ஜப்பானுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யத் தொடங்கின. இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவின் முக்கிய மாம்பழ ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச்

News, World News

சர்வதேச சந்தையில் தங்கம் விலை வீழ்ச்சி

வெள்ளி விலையும் குறைவு பதிவு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,509.64 அமெரிக்க டொலர்களாக நிலவுகிறது. இது முன்னைய நிலையை விட 31.55 டொலர்கள் (0.69%) குறைவாகும் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், வெள்ளி விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.51 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 0.84 டொலர்கள் (1.10%) வீழ்ச்சியை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

News, World News

பாகிஸ்தானில் பயங்கர தாக்குதல்

Pakistan நாட்டின் தென்மேற்கு பகுதியான Quetta நகரில் பயணிகள் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று ரயில் தண்டவாளத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த வெடிப்பு காரணமாக ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்ததுடன், சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை

News, World News

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதுடன், இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. சந்தை தகவல்களின் அடிப்படையில், WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 96.60 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.05 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதற்கிடையில்,

News, World News

இலங்கையில் உயிர்மாய்ப்பு விகிதம் 70% குறைவு: ஜெனிவாவில் அமைச்சர் தகவல்

அதிவீரியம் கொண்ட நச்சுப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் படிப்படியாகத் தடை செய்ததன் மூலம், இலங்கையில் இடம்பெறும் உயிர்மாய்ப்பு சம்பவங்கள் சுமார் 70 சதவீதத்தால் குறைந்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் 79 ஆவது உலக சுகாதார பேரவையின் பக்கநிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் உயிர்மாய்ப்புகளை தடுத்தல்” என்ற விசேட அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 1995 ஆம்

Scroll to Top