World News

News, World News

“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல”: அமெரிக்க தூதரகத் திறப்புக்கு எதிர்ப்பு போராட்டம்

டிரம்ப் திட்டத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் கண்டனம் கிரீன்லாந்துவில் அமெரிக்கா தனது புதிய மற்றும் மிகப்பெரிய தூதரக மையத்தை திறந்த நிலையில், அந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்தில் அதிக செல்வாக்கை ஏற்படுத்த முயல்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த எதிர்ப்பு உருவாகியுள்ளது. டென்மார்க்கின் அரை-சுயாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன் […]

News, World News

ஈரான்–அமெரிக்க மோதல்: அமெரிக்க இராணுவத்துக்கு பில்லியன் டொலர் இழப்பு

ட்ரோன் தாக்குதல்களில் பெரும் சேதம் என தகவல் ஈரான் நடத்திய தாக்குதல்களில், அமெரிக்க இராணுவத்தின் வான்படைக் கட்டமைப்பில் உள்ள “ரீப்பர்” (Reaper) ரக ஆளில்லா போர் வானூர்திகளில் சுமார் 20 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் சூழல் உருவானதிலிருந்து இதுவரை 24-க்கும் மேற்பட்ட MQ-9 Reaper வகை ஆளில்லா வானூர்திகளை ஈரான் அழித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த இழப்புகளின் மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது,

News, World News

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவு

வெள்ளி விலையில் இன்று உயர்வு பதிவு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,524.9 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 15.79 அமெரிக்க டொலர்கள் அல்லது 0.36 சதவீத வீழ்ச்சியாகும். இதனிடையே, சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 76.52 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன், இது 0.16 அமெரிக்க டொலர்கள் அல்லது 0.21 சதவீத உயர்வைக்

News, World News

சீனாவில் கனமழை மற்றும் வெள்ளப் பேரழிவு: 21 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்

சீனா நாட்டின் பல மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கால் இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீற்றர் பரப்பளவிலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குவாங்சி பகுதியில் பண்ணைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதில், அதிலிருந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், குயிஜவ் மாகாணத்தில்

News, World News

ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஜப்பானின் தெற்குப் பகுதியில் இன்று (20) 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 11:46 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியதுடன், இது சுமார் 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்கு அமமி பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக ஜப்பான் பிரதமர் அலுவலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

News, World News

பசியால் குழந்தைகளை விற்கும் அவலம்: ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் மனிதாபிமான நெருக்கடி

தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் குறைவு காரணமாக, மக்கள் பசியின் கொடுமையில் தங்களது குழந்தைகளையே விற்கும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டின் பெரும்பாலான மக்கள் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சுமார் 4.7 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் வாழ்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோர் மாகாணத்தில் தினமும் வேலை தேடி நூற்றுக்கணக்கானோர்

News, World News

தங்கம், வெள்ளி விலை திடீர் உயர்வு : நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (18) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,545.9 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸுக்கு 76.53 டொலராக உயர்ந்துள்ளது. உள்நாட்டு சந்தையிலும் விலை உயர்வு சாத்தியம் கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், தற்போதைய சர்வதேச விலை உயர்வின் தாக்கம் இலங்கையிலும்

News, World News

அமெரிக்க விமானக் கண்காட்சியில் நடுவானில் போர்விமானங்கள் மோதல்

அமெரிக்காவில் இடம்பெற்ற விமானக் கண்காட்சியின் போது, நடுவானில் இரண்டு போர்விமானங்கள் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், விமானங்களில் இருந்த நான்கு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து EA-18G Growler ரக விமானங்கள் வான்வழி சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது இடம்பெற்றதாக அமெரிக்க கடற்படை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். கண்காட்சி நிகழ்வுகள் உடனடியாக இரத்து ஐடஹோ மாநிலத்தின் மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்திலிருந்து சுமார் 3.2 கி.மீ தொலைவில் நடந்த இந்த சம்பவத்தைத்

News, World News

“காலம் கடந்து கொண்டிருக்கிறது” : ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ள நிலையில், “காலம் கடந்து கொண்டிருக்கிறது” என டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களுக்கு எதுவும் மிஞ்சாது எனவும், “காலம் மிகவும் முக்கியமானது” எனவும் வலியுறுத்தியுள்ளார். நெதன்யாகுவுடன் பேச்சுக்குப் பிறகு வெளியான எச்சரிக்கை இந்த கருத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு

News, World News

ஈரானை விட்டு காசாவை நோக்கிய இஸ்ரேல் கவனம் : போர் வியூக மாற்றம்

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 8 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவ தரப்புகள் தெரிவித்துள்ளன. காசா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதல்களில் கான் யூனிஸ் நகரில் உள்ள காவல் நிலையம் அருகிலும், தற்காலிக முகாம்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுததாரி ஒருவரை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், டெய்ர் அல் பாலாஹ் பகுதியில் உள்ள அல் அக்சா மருத்துவமனைக்கு அருகிலுள்ள சமூக

Scroll to Top