
இந்தியா–இலங்கை பயணிகள் கப்பல் சேவை மேம்பாடு; நாகப்பட்டினத்தில் வரிவிலக்கு கடைகள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைந்துள்ள சர்வதேச பயணிகள் முனையத்தில் வரிவிலக்கு (Duty Free) விற்பனை வசதிகளை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாகப்பட்டினம்–காங்கேசன்துறை கப்பல் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், துறைமுகத்தில் வழங்கப்படும் சேவைகளை சர்வதேச விமான நிலையம் மற்றும் கடல்சார் முனையங்களுக்கு இணையான தரத்தில் மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு கடல்சார் சபை (TNMB) […]









