World News

News, World News

மத்தியஸ்த முன்மொழிவுகளுக்கு ஈரான் பதில் தயார் – அமெரிக்கா, இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சர்வதேச மத்தியஸ்தர்கள் முன்வைத்துள்ள முன்மொழிவுகளுக்கு ஈரான் தனது பதிலைத் தயார் செய்துள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஈரானின் அரச செய்தி நிறுவனம் ‘IRNA’ உறுதிப்படுத்தியுள்ளது. மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்கா முன்வைத்த 15 அம்சங்களைக் கொண்ட சமாதானத் திட்டத்தை எந்த நிலையிலும் ஏற்க முடியாது என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “எமது தேசிய நலன்கள் […]

News, World News

ஹோர்முஸ் நீரிணையில் பெரிய மாற்றம்: சுங்கக் கட்டணம் விதிக்க ஈரான் ஒப்புதல்!

ஹோர்முஸ் நீரிணையில் கடல் போக்குவரத்துக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு ஈரான் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு, உலகளாவிய கடல் வர்த்தகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எண்ணெய் கடத்தல் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையில் இத்தகைய மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்களை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த புதிய

News, World News

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் புதிய இராணுவ திட்டம் – 10,000 படையினர் அனுப்பல் பரிசீலனை

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தை முன்னிட்டு, அங்கு கூடுதலாக 10,000 தரைப்படை வீரர்களை அனுப்புவது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை (பென்டகன்) ஆலோசித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த தகவலை The Wall Street Journal வெளியிட்டுள்ளதுடன், இந்நடவடிக்கை அமெரிக்க ஜனாதிபதி Donald Trumpக்கு மேலதிக இராணுவ விருப்பங்களை வழங்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், தெஹ்ரானுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் கூட, அமெரிக்கா ஒரே நேரத்தில்

News, World News

மசகு எண்ணெய் விலை ஏற்றம் தொடர்கிறது – சர்வதேச சந்தையில் உயர்வு

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் தாக்கம் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. அதன்படி, பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 107.02 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 94.2 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது. இந்த உயர்வு, உலகளாவிய எரிசக்தி சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்கால விலை நிலவரம் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

News, World News

‘15 அம்ச’ அமெரிக்க திட்டம் மீது ஈரான் கவனம் – அதிகாரப்பூர்வ பதில் இன்னும் இல்லை

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முன்மொழிந்ததாகக் கூறப்படும் ‘15 அம்ச சமாதானத் திட்டம்’ குறித்து ஈரான் கவனமாக பரிசீலித்து வருவதாக அதன் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராகச்சி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை ஈரான் உடனடியாக நிராகரிக்கவில்லை என்றாலும், அதற்கான உத்தியோகபூர்வ நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் உள்ளது. தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில ‘15 அம்சத் திட்டம்’

News, World News

இலங்கைக்கு உதவ முன்வந்தது ஈரான்! எரிபொருள் வழங்க தயாரென அறிவிப்பு

இலங்கை ஒரு நட்பு நாடாக இருப்பதால், எந்த நேரத்திலும் உதவி செய்ய ஈரான் தயாராக உள்ளது என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியபோது, இலங்கை எரிபொருள் அல்லது பிற அத்தியாவசிய பொருட்களை கோரினால் அவற்றை வழங்குவதற்கு ஈரான் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தனது நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணையை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

News, World News

எண்ணெய் விலை உயரும் அபாயம்: ஈரான் கடும் எச்சரிக்கை

பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு பதிலடியாக எரிசக்தி மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகளை குறிவைத்து உடனடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப், “ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்பட்டால், பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கியமான எரிசக்தி மற்றும் எண்ணெய் அமைப்புகள் சட்டபூர்வமான இலக்குகளாக கருதப்படும். அவை கடுமையாக தாக்கப்பட்டு மீள முடியாத சேதம் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும்,

News, Uncategorized, World News

“போர் முடிவுக்கு நெருங்குகிறது”டொனால்ட் டிரம்ப் முக்கிய அறிவிப்பு

அமெரிக்கா, ஈரானில் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், ஈரானில் அமெரிக்கா நிர்ணயித்துள்ள முக்கிய ராணுவ இலக்குகளை அடைவதில் “மிகவும் நெருக்கமான” நிலையை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து, அடுத்த கட்டமாக ராணுவ நடவடிக்கைகளை விரைவில் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா நேரடியாகப் பயன்படுத்துவதில்லை

News, World News

“எரிவாயு பற்றாக்குறை முடிவுக்கு!” – லிட்ரோவின் முக்கிய அறிவிப்பு

நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3,900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை விரைவில் கொள்கலன்களுக்கு நிரப்பி அதனைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன, குறிப்பிட்டார். இந்த நிலையில் நாட்டில் போதுமான களஞ்சியசாலைகள் இன்மையால், கொள்வனவு செய்யப்பட்ட 33 ஆயிரம் மெட்ரிக்தொன் எரிவாயுவை மாலைத்தீவில் களஞ்சியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அங்கிருந்து மூன்று தினங்களுக்கு ஒருமுறை சிறிய கப்பல்களில் நாட்டுக்கு எரிவாயுவை

News, World News

“ரமழானை கூட மதிக்கவில்லையா?” – ஈரான் மீது கத்தாரின் அதிருப்தி

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மேற்கொண்ட தாக்குதல் கத்தாரின் எரிசக்தி துறையில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி எனக் கூறப்படும் இந்தத் தாக்குதலில், கத்தாரின் முக்கியமான Ras Laffan Industrial City எரிவாயு உற்பத்தி தளம் சேதமடைந்துள்ளது. இதன் விளைவாக, உலகின் முன்னணி LNG ஏற்றுமதியாளரான கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி திறன் சுமார் 17% வரை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தார் எரிசக்தித்துறை அமைச்சர் Saad

Scroll to Top