World News

News, World News

இந்தியா–இலங்கை உறவை வலுப்படுத்துவோம்:தமிழக முதல்வர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள Vijay அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி Anura Kumara Dissanayake வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் அவர் இந்த வாழ்த்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இலங்கையும் தமிழகமும் வரலாறு, கலாசாரம், தொழில்முனைவு மற்றும் தலைமுறை தலைமுறையாக தொடரும் மக்கள் உறவுகள் மூலம் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா – இலங்கை உறவு தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், இரு தரப்புக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் புதிய வாய்ப்புகளுக்கும் எதிர்காலத்தில் […]

News, World News

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் இயந்திரக் கோளாறால் கடலில் சிக்கியது; 144 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் இடையே சேவையில் ஈடுபட்டிருந்த பயணிகள் கப்பல், இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் பல மணிநேரம் தாமதமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கப்பல் நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கிப் புறப்பட்டது. வழக்கமாக சுமார் நான்கு மணிநேரத்தில் சென்றடைய வேண்டிய இந்தப் பயணம், மோசமான கடல் நிலை மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக நீண்ட நேரம் எடுத்ததாக கூறப்படுகிறது. நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கடல்

News, World News

தெனியாயவில் பரவும் காய்ச்சல்: விசாரணைக்கு சுகாதார அமைச்சின் விசேட குழு வருகை

தெனியாய கல்வி வலயத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையை ஆய்வு செய்து, அதனை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவைச் சேர்ந்த விசேட மருத்துவ நிபுணர்கள் குழு அப்பகுதிக்கு செல்லவுள்ளது. இந்த தகவலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க உறுதிப்படுத்தியுள்ளார். நோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் நேற்று (07) மற்றும் இன்று (08) ஆகிய நாட்களில் மூடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை

News, World News

விவசாயத்தில் இணைந்தால் இரு நாடுகளும் முன்னேறும்: வியட்நாம் ஜனாதிபதி

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம், இன்று (08) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். அப்போது அவர், விவசாயத்தை வெறும் பொருளாதாரத் துறையாக மட்டுமே பார்க்காமல், “உயிர்காக்கும் துறை” என்ற அணுகுமுறையுடன் இலங்கையும் வியட்நாமும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக வியட்நாம் மேற்கொண்ட மாற்றங்களை விளக்கிய அவர், “மானிய பொருளாதார முறையிலிருந்து சந்தைப் பொருளாதாரக் கொள்கைக்கு நாங்கள் மாறினோம். இன்று வியட்நாம்

News, World News

LPL வெளிநாட்டு வீரர்கள் பதிவு நாளை தொடக்கம்!

லங்கா பிரீமியர் லீக் (Lanka Premier League) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை (08) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு செயல்முறை வரும் 18ஆம் தேதி வரை நடைபெறும் என Sri Lanka Cricket வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் Sri Lanka Cricket Official Website என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்தொடர் கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மற்றும் ஆர். பிரேமதாச மைதானம், கண்டி பல்லேகல மற்றும்

News, World News

லெபனானில் மதச் சிலை அவமதிப்பு புகைப்படம்: இஸ்ரேல் வீரர் சர்ச்சையில் சிக்கல்

லெபனான்–இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், லெபனானில் நிலை கொண்டுள்ள இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பொதுமக்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதும், கொள்ளையடிப்பதும் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அண்மையில் தபெல் நகரில், இராணுவ சீருடை அணிந்த ஒருவர் இயேசு கிறிஸ்து சிலையை உடைக்கும் காட்சி வைரலானது. அதே நகரில் தற்போது கன்னி மரியாள் சிலை அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு புகைப்படம்

News, World News

ஆளுநர் – மத்திய அரசுக்கு எதிராக நாளை காங்கிரஸ் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதை தடுக்க முயற்சி நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி, ஆளுநரையும் மத்திய பாஜக அரசையும் கண்டித்து நாளை காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க முடியாத வகையில் மத்திய பாஜக அரசு அரசியலமைப்புக்கு முரணாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

News, World News

எண்ணெய், எரிவாயு நெருக்கடி மேலும் 6 மாதங்கள் நீடிக்கும்

ஈரானைச் சுற்றியுள்ள மோதலால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், குறைந்தபட்சம் மேலும் ஆறு மாதங்கள் தொடரும் என நோர்வே எரிசக்தி நிறுவனம் எக்வினோர் தெரிவித்துள்ளது. நோர்வே ஒளிபரப்பு நிறுவனம் NRK-க்கு அளித்த பேட்டியில், எக்வினோர் நிறுவனத்தின் தலைவர், தற்போது உடனடியாக அமைதி நிலவினாலும் கூட, சந்தை வழமையான நிலைக்குத் திரும்ப குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறினார். இந்த மோதலின் தாக்கத்தால் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளதால், நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர

News, World News

இளம் தலைமுறையின் சக்தி வென்றது – விஜய் பெருமிதம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் மக்களுடன் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட உருக்கமான பதிவில், கட்சி தொடங்கிய நாளிலிருந்தே பலர் ஏளனமாகவும் விமர்சனமாகவும் அணுகியதை நினைவுகூர்ந்தார். அரசியலில் இது இயல்பானது எனக் கருதி, யாரையும் சாராமல் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் தன்னம்பிக்கையுடன் நின்றதாக குறிப்பிட்டார். நடுநிலை மற்றும் விமர்சனம் என்ற பெயரில் பல அவதூறுகளும் அவமானங்களும் எதிர்கொண்ட போதிலும், தமிழ்நாட்டு மக்கள்

News, World News

தமிழகத்தில் தொங்கு சட்டசபை நிலை? த.வெ.க. ஆட்சிக்கான 4 கூட்டணி வழிகள் – விஜய் முடிவு கவனம்

தமிழக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரசியல் சூழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒரு தொகுதியை அவர் ராஜினாமா

Scroll to Top