World News

News, World News

எண்ணெய் விலை உயரும் அபாயம்: ஈரான் கடும் எச்சரிக்கை

பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு பதிலடியாக எரிசக்தி மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகளை குறிவைத்து உடனடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப், “ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்பட்டால், பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கியமான எரிசக்தி மற்றும் எண்ணெய் அமைப்புகள் சட்டபூர்வமான இலக்குகளாக கருதப்படும். அவை கடுமையாக தாக்கப்பட்டு மீள முடியாத சேதம் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், […]

News, Uncategorized, World News

“போர் முடிவுக்கு நெருங்குகிறது”டொனால்ட் டிரம்ப் முக்கிய அறிவிப்பு

அமெரிக்கா, ஈரானில் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், ஈரானில் அமெரிக்கா நிர்ணயித்துள்ள முக்கிய ராணுவ இலக்குகளை அடைவதில் “மிகவும் நெருக்கமான” நிலையை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து, அடுத்த கட்டமாக ராணுவ நடவடிக்கைகளை விரைவில் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா நேரடியாகப் பயன்படுத்துவதில்லை

News, World News

“எரிவாயு பற்றாக்குறை முடிவுக்கு!” – லிட்ரோவின் முக்கிய அறிவிப்பு

நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3,900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை விரைவில் கொள்கலன்களுக்கு நிரப்பி அதனைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன, குறிப்பிட்டார். இந்த நிலையில் நாட்டில் போதுமான களஞ்சியசாலைகள் இன்மையால், கொள்வனவு செய்யப்பட்ட 33 ஆயிரம் மெட்ரிக்தொன் எரிவாயுவை மாலைத்தீவில் களஞ்சியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அங்கிருந்து மூன்று தினங்களுக்கு ஒருமுறை சிறிய கப்பல்களில் நாட்டுக்கு எரிவாயுவை

News, World News

“ரமழானை கூட மதிக்கவில்லையா?” – ஈரான் மீது கத்தாரின் அதிருப்தி

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மேற்கொண்ட தாக்குதல் கத்தாரின் எரிசக்தி துறையில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி எனக் கூறப்படும் இந்தத் தாக்குதலில், கத்தாரின் முக்கியமான Ras Laffan Industrial City எரிவாயு உற்பத்தி தளம் சேதமடைந்துள்ளது. இதன் விளைவாக, உலகின் முன்னணி LNG ஏற்றுமதியாளரான கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி திறன் சுமார் 17% வரை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தார் எரிசக்தித்துறை அமைச்சர் Saad

News, World News

ஹோர்முஸ் நீரிணையில் தடைகளையும் மீறி ஈரான் நடத்தும் எண்ணெய் ஏற்றுமதி!

மார்ச் மாதம் போரின் தொடக்கத்திலிருந்து, ஹோர்முஸ் நீரிணை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த போதிலும், கடல்சார் தரவுகள் சுமார் 90 கப்பல்கள் பாதுகாப்பாக இந்த பாதையை கடந்துள்ளதாக தெரிவிக்கின்றன. லொயிட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் கூறியதுபோல், ஹோர்முஸ் நீரிணையை கடந்த கப்பல்களில் பெரும்பாலானவை மேற்கத்திய நாடுகளின் தடைகளை தவிர்க்க தங்களது இருப்பிடத்தை மறைக்கும் “மர்ம” கப்பல்கள் ஆகும். ஈரானுடன் தொடர்புடைய கப்பல்களே இந்த பாதையை பயன்படுத்தியதாகக் கணிக்கப்பட்டுள்ளது. போரின் சூழலிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஈரான் 16 மில்லியன் பீப்பாய்கள்

News, World News

இலங்கை ஜனாதிபதி – கத்தார் அமீர் அவசர தொலைபேசி உரையாடல்

இலங்கை ஜனாதிபதி அனுரா குமார திசநாயகே மற்றும் கத்தார் அமீர் Sheikh Tamim bin Hamad Al Thani இன்று அவசர தொலைபேசி உரையாடலில் கலந்துகொண்டு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றநிலையில் முக்கிய விவாதங்களை நடத்தினர். உரையாடல் தொடக்கத்தில், ஜனாதிபதி கத்தாரின் தற்போதைய சூழ்நிலை பற்றிக் கேட்டறிந்து, ஈரானின் தாக்குதல்கள் காரணமாக உருவான பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் ஒற்றுமை மற்றும் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த அமீர், கத்தாரில் வசிக்கும் இலங்கை

Scroll to Top