
புத்தாண்டு காலத்தில் மதுபான விற்பனைக்கு தற்காலிக கட்டுப்பாடு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி ஆணையாளருமான ஏ.ஏ. ரொஷான் பெரேரா வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் அனுமதியுடன் அமுல்படுத்தப்படும் இந்த உத்தரவின் அடிப்படையில், மதுபான விற்பனைக்கு உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களும் குறித்த இரண்டு நாட்களிலும் செயல்படக்கூடாது. இதில் வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள், பார்கள், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் […]









