இறுதி வரை போராடிய டெல்லி!9 ஆண்டுகளில் முதல் அரை சதத்தை பதிவு செய்த தமிழக வீரர்

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் 14ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டகாரர் வீரர் சாய் சுதர்சன் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவருடன் ஆடிய அணித்தலைவர் சுப்மன் கில் அரைசதம் கடந்தார். கில் 45 பந்துகளில் 70 ஓட்டங்கள் (4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) எடுத்தார். வோஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்தார்.

இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை வாஷிங்டன் சுந்தர் பதிவு செய்து அசத்தியுள்ளார்.

2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களை குவித்தது.

டெல்லி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும்,லுங்கி நிகிடி மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

211 ஓட்டங்கள் என்ற இமால இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பதும் நிசங்கா 24 பந்துகளில் 41 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய கே.எல். ராகுல் அரைசதம் கடந்தார்.

ஆட்டத்தின் கடைசி வரை போராடிய கே.எல். ராகுல் 52 பந்துகளில் 92 ஓட்டங்கள் (11 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) அடித்த நிலையில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உருவானது. இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய விப்ராஜ் அடுத்த பந்தில் வெளியேறினார்.

கடைசி மூன்று பந்துகளில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் டேவிட் மில்லர் சிக்சர் அடித்தார். இதையடுத்து கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top