News

News, World News

இந்தியா–ஜப்பான் உறவு புதிய கட்டத்திற்கு: மோடியின் நெகிழ்ச்சியான வரவேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை “என் தங்கை” என அன்புடன் குறிப்பிட்டு வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணத்தின் போது, சுமார் ₹35,000 கோடி முதலீட்டில் ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுந்து உற்பத்தி ஆலையை இரு தலைவர்களும் இணைந்து திறந்து வைத்தனர். இதனையடுத்து, புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா–ஜப்பான் 16ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டில் இரு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த உச்சிமாநாட்டில் பொருளாதாரப் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, முக்கிய […]

News, World News

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை அதிரடி ஏற்றம்

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (03) குறிப்பிடத்தக்க அளவில் உயர்வடைந்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,139.77 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 61.24 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் உள்நாட்டு தங்க விலையிலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது

Local News, News

காணாமல் போன செங்கோல் கண்டுபிடிப்பு: காவல்துறையின் விசாரணையில் புதிய தகவல்

வவுனியா மாநகர சபையில் இருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட செங்கோல், காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் அமைந்துள்ள தளவாட தயாரிப்பு நிலையம் ஒன்றிலிருந்து அந்த செங்கோல் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட செங்கோல் வவுனியா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், பின்னர் மாநகர சபையின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மாநகர சபையிலிருந்து செங்கோல் எவ்வாறு தளவாட தயாரிப்பு நிலையத்துக்கு

Local News, News

நாணயச் சந்தையில் மாற்றம்: டொலர் விற்பனை விலை மீண்டும் சரிவு

இலங்கை மத்திய வங்கி இன்று (03) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.340.44 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.341.09 ஆக இருந்த நிலையில், இன்று அது ரூ.0.65 குறைந்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் சரிவை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

News, Uncategorized

பேருந்தில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு: திங்கட்கிழமை முதல் கட்டண உயர்வு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) திருத்திய புதிய பேருந்து கட்டணங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 6) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய கட்டண திருத்தத்தின்படி, சாதாரண பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 இலிருந்து ரூ.34 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சாதாரண பேருந்து சேவைகளில் 100 கிலோமீற்றர் வரையிலான பயணங்களுக்கான கட்டணம் 12 சதவீதத்தாலும், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரப் பயணங்களுக்கான கட்டணம் 20 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சொகுசு பேருந்து சேவைகளில் 100 கிலோமீற்றருக்குட்பட்ட பயணங்களுக்கான

News, Sports News

காலி முதல் கொழும்பு வரை… இந்தியா–இலங்கை டெஸ்ட் தொடருக்கு கவுண்டவுன் ஆரம்பம்!

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025–2027) தொடரின் ஒரு பகுதியாக, இந்திய ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த தொடருக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலி சர்வதேச கிரிக்கெட்

Astrology, News

இன்றைய ராசி பலன் 03 ஜூலை 2026

இன்று 03 ஜூலை 2026 வெள்ளி கிழமை, பராபவ வருடம், ஆனி மாதம் 19ம் தேதி மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சுக்கிர அருள் கிடைக்கும் நாள். கடகத்தில் குரு உச்சம் பெற்று இருப்பதோடு, மகரத்தில் உள்ள சந்திரனி மீது பார்வை விழுகிறது. இன்று மிதுன ராசியில் உள்ள புனர்பூசம், பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஜூலை 03, 2026 ஆனி மாதம் 19ம் தேதி

News, Uncategorized

ATM முன் வான் படை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம்: இருவர் கைது

வாதுவ பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரம் முன்பாக வான் படை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு சந்தேகநபர்களை வாதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 22 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்

News, World News

“ஈரான் அணுவாயுதம் வைத்திருக்க அனுமதிக்க முடியாது” – ட்ரம்ப் திட்டவட்டம்

ஈரான் ஒருபோதும் அணுவாயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்றும், அந்நாட்டின் அணுவாயுதத் திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதே தற்போதைய முக்கிய நோக்கம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான சாத்தியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அமெரிக்கா–ஈரான் உறவுகள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ஈரானின் அணுவாயுதக் கொள்கை தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஈரானின் அணுவாயுத திறன் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு

News, World News

அவுஸ்திரேலிய விசா கட்டணங்கள் அதிரடியாக உயர்வு

அவுஸ்திரேலிய அரசு, பெரும்பாலான விசா வகைகளுக்கான விண்ணப்பக் கட்டணங்களை ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கணிசமாக உயர்த்தியுள்ளது. 2026–2027 நிதியாண்டின் தொடக்கத்துடன் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கட்டண உயர்வு, சர்வதேச மாணவர்கள், தற்காலிக பட்டப்படிப்பு விசாவுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் குடும்ப அடிப்படையிலான குடியேற்ற விண்ணப்பதாரர்களை அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய திருத்தங்களின்படி, மாணவர் விசா விண்ணப்பக் கட்டணம் 2,500 அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளை, தற்காலிக பட்டப்படிப்பு (Temporary Graduate) விசாவுக்கான கட்டணம்

Scroll to Top