
$625,000 பணம் மாயம்: அஞ்சல் திணைக்களம் மீது இணைய மோசடி சந்தேகம்
இலங்கை அஞ்சல் திணைக்களம் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பியதாகக் கூறப்படும் 625,000 அமெரிக்க டொலர் தொகை கிடைக்கவில்லை என அமெரிக்க தரப்பு அறிவித்துள்ளது. இதை அஞ்சல் மா அதிபர் ஆர்.பி. சத்குமார உறுதிப்படுத்தியுள்ளார். திணைக்களம் பணம் அனுப்பியதாகக் கூறினாலும், அந்த நிதி தமக்கு வரவில்லை என அமெரிக்க அஞ்சல் சேவை தெரிவித்துள்ளது. இதனால் சம்பவம் தொடர்பில் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன. ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், இது ‘பிஷிங்’ இணைய மோசடியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மின்னஞ்சல் மூலம் வங்கிக் […]









