
நீதிமன்ற அனுமதியுடன் கைதி ஜெயக்குமாரின் உடல் அரச செலவில் அடக்கம்
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றுள்ளன. யாழ்ப்பாணம் கோம்பையன் இந்து மயானத்தில் அவரது உடல் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ். பிரணவன் உறுதிப்படுத்தியுள்ளார். வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் உறுதி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து தீர்ப்பை அறிவிப்பதற்காக மரண தண்டனை கைதிகள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து […]









