News

News, Sports News

“மும்பைக்காக மீண்டும் சாம்பியன் பட்டம்” – ரோகித் சர்மா உறுதி

ஐபிஎல் 2026 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது ரசிகர்களுக்காக “MI Mix” என்ற பிரம்மாண்ட கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியது. இந்த விழா மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கார்டனில் மார்ச் 21 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அணியின் தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா, அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். […]

Local News, News

அரசாங்கம் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சியினரை குறிவைக்கிறது – நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக எதிர்க்கட்சியினர்மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவரது கூற்றுப்படி, உலக சந்தை விலையை விட ஒரு பீப்பாய் எரிபொருளுக்கு சுமார் 45 அமெரிக்க டொலர் அதிகமாக செலுத்தி கொள்வனவு செய்யப்படுகின்றது. நட்பு நாடுகளுடன் பேசி குறைந்த விலையில் எரிபொருள் பெற்றுத்தருவோம் என அரசாங்கம் முன்பு உறுதியளித்த

Local News, News

வங்கிகளின் செயல்பாடு: புதிய நேர மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பு

இலங்கையில் உள்ள வங்கிகள் திங்கள் முதல் வெள்ளி வரை அத்தியாவசிய சேவையாக தொடர்ந்து செயல்படும் என இலங்கை வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, வங்கிச் சேவைகளில் சில தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, புதன்கிழமைகளில் வங்கிக் கிளைகள் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில், வழக்கமான நேர அட்டவணையின்படி வங்கிச் சேவைகள் நடைபெறும். மேலும், வாடிக்கையாளர்கள்

Local News, News

நாளையும் மறுநாளும் எரிபொருள் நிலையங்கள் திறந்திருக்கும் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் எரிபொருள் விநியோகம் வழக்கம்போல் நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடும் வகையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே விளக்கம் அளித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் ஒரு சனிக்கிழமை கூட்டுத்தாபனம் மூடப்படுவது வழக்கமான நடைமுறை என்றாலும், அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த சனிக்கிழமை மூடப்படும் என்ற தகவல்கள் தவறானவை என அவர் குறிப்பிட்டார். தற்போதைய அதிகப்படியான தேவையையும், சனிக்கிழமை இரவு QR

News, Uncategorized, World News

“போர் முடிவுக்கு நெருங்குகிறது”டொனால்ட் டிரம்ப் முக்கிய அறிவிப்பு

அமெரிக்கா, ஈரானில் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், ஈரானில் அமெரிக்கா நிர்ணயித்துள்ள முக்கிய ராணுவ இலக்குகளை அடைவதில் “மிகவும் நெருக்கமான” நிலையை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து, அடுத்த கட்டமாக ராணுவ நடவடிக்கைகளை விரைவில் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா நேரடியாகப் பயன்படுத்துவதில்லை

Local News, News

இலங்கையில் தங்க விலை திடீர் சரிவு

இலங்கையில் தங்க விலை வீழ்ச்சி – சர்வதேச சந்தை தாக்கம் பிரதிபலிப்பு சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தங்க விலை குறைவு, அதன் நேரடி தாக்கமாக இலங்கையின் ஆபரணத் தங்கச் சந்தையிலும் இன்று விலை வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது என்று அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளத சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 4,720 அமெரிக்க டொலராகவும், வெள்ளி ஒரு அவுன்ஸ் 73.79 டொலராகவும் விற்பனை செய்யப்படுகிறது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய

News, World News

“எரிவாயு பற்றாக்குறை முடிவுக்கு!” – லிட்ரோவின் முக்கிய அறிவிப்பு

நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3,900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை விரைவில் கொள்கலன்களுக்கு நிரப்பி அதனைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன, குறிப்பிட்டார். இந்த நிலையில் நாட்டில் போதுமான களஞ்சியசாலைகள் இன்மையால், கொள்வனவு செய்யப்பட்ட 33 ஆயிரம் மெட்ரிக்தொன் எரிவாயுவை மாலைத்தீவில் களஞ்சியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அங்கிருந்து மூன்று தினங்களுக்கு ஒருமுறை சிறிய கப்பல்களில் நாட்டுக்கு எரிவாயுவை

News, World News

“ரமழானை கூட மதிக்கவில்லையா?” – ஈரான் மீது கத்தாரின் அதிருப்தி

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மேற்கொண்ட தாக்குதல் கத்தாரின் எரிசக்தி துறையில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி எனக் கூறப்படும் இந்தத் தாக்குதலில், கத்தாரின் முக்கியமான Ras Laffan Industrial City எரிவாயு உற்பத்தி தளம் சேதமடைந்துள்ளது. இதன் விளைவாக, உலகின் முன்னணி LNG ஏற்றுமதியாளரான கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி திறன் சுமார் 17% வரை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தார் எரிசக்தித்துறை அமைச்சர் Saad

News, World News

ஹோர்முஸ் நீரிணையில் தடைகளையும் மீறி ஈரான் நடத்தும் எண்ணெய் ஏற்றுமதி!

மார்ச் மாதம் போரின் தொடக்கத்திலிருந்து, ஹோர்முஸ் நீரிணை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த போதிலும், கடல்சார் தரவுகள் சுமார் 90 கப்பல்கள் பாதுகாப்பாக இந்த பாதையை கடந்துள்ளதாக தெரிவிக்கின்றன. லொயிட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் கூறியதுபோல், ஹோர்முஸ் நீரிணையை கடந்த கப்பல்களில் பெரும்பாலானவை மேற்கத்திய நாடுகளின் தடைகளை தவிர்க்க தங்களது இருப்பிடத்தை மறைக்கும் “மர்ம” கப்பல்கள் ஆகும். ஈரானுடன் தொடர்புடைய கப்பல்களே இந்த பாதையை பயன்படுத்தியதாகக் கணிக்கப்பட்டுள்ளது. போரின் சூழலிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஈரான் 16 மில்லியன் பீப்பாய்கள்

News, World News

இலங்கை ஜனாதிபதி – கத்தார் அமீர் அவசர தொலைபேசி உரையாடல்

இலங்கை ஜனாதிபதி அனுரா குமார திசநாயகே மற்றும் கத்தார் அமீர் Sheikh Tamim bin Hamad Al Thani இன்று அவசர தொலைபேசி உரையாடலில் கலந்துகொண்டு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றநிலையில் முக்கிய விவாதங்களை நடத்தினர். உரையாடல் தொடக்கத்தில், ஜனாதிபதி கத்தாரின் தற்போதைய சூழ்நிலை பற்றிக் கேட்டறிந்து, ஈரானின் தாக்குதல்கள் காரணமாக உருவான பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் ஒற்றுமை மற்றும் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த அமீர், கத்தாரில் வசிக்கும் இலங்கை

Scroll to Top