June 2026

Local News, News

ஒரே மாதத்தில் ரூ.427 அதிகரிப்பு; கொழும்பில் அதிகபட்சம், மொனராகலையில் குறைந்தபட்சம்

இலங்கையில் ஒரு நபர் தனது அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மாதமொன்றுக்கு குறைந்தபட்சமாக 17,117 ரூபா செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 ஏப்ரல் மாத உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு அறிக்கையின்படி, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் வறுமைக் கோட்டின் மதிப்பு 427 ரூபாவால் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நபருக்கான குறைந்தபட்ச வாழ்வாதாரச் செலவு 16,690 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில், ஏப்ரல் […]

News, World News

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான பதற்றம் தணியும் சூழல்; இருதரப்பும் தாக்குதல் நடத்தாது என தகவல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக அமைந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பெய்ரூட்டிற்கு இஸ்ரேலிய படைகள் அனுப்பப்படமாட்டாது என்றும், ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்த படைகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹிஸ்புல்லா அமைப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அந்த பேச்சுவார்த்தையும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், இஸ்ரேல் பெய்ரூட் மீது மற்றும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது எந்தவொரு தாக்குதலையும்

Local News, News

டிட்வா சூறாவளி பாதித்த மக்களுக்கு கூடுதல் நிவாரணம்: ஜனாதிபதியின் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வலுவூட்டல் திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த முக்கிய முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 டிசம்பர் 05 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வலுவூட்டல் திட்டம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டபோது பல சவால்கள் அடையாளம்

Astrology, News

இன்றைய ராசி பலன் 01 ஜூன் 2026

இன்று ஜூன் 01, 2026 திங்கட் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 16ம் தேதி, விருச்சிகம், தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சந்திர பகவானின் ஆட்சி பெற்ற இன்று ருச்ச யோகம் கிடைக்கக்கூடிய நாள். இன்று மேஷ ராசியில் உள்ள பரணி, கிருத்திகை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஜூன் 01, 2026 வைகாசி மாதம் 16ம் தேதி திங்கட் கிழமை, விருச்சிகம், தனுசு ராசியில்

News, Uncategorized

வெசாக் காலத்தில் விதிமீறலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

வெசாக் பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை களுத்துறை வடக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காவல்துறையினரின் தகவலின்படி, கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பலவற்றில் இலக்கத் தகடுகள் பொருத்தப்படாமல் இருந்ததுடன், சைலன்சர்கள் மாற்றியமைக்கப்பட்டு அதிக சத்தம் எழும் வகையில் இயக்கப்பட்டிருந்தன. மேலும், சில வாகனங்கள் பக்கக் கண்ணாடிகள் இன்றி வீதிகளில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் வலயங்களை பார்வையிட வருகை தரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில்,

Local News, News

நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் தடுப்புக்கு கோடிக்கணக்கில் செலவிடும் அரசு

இலங்கையில் வெறிநாய்க்கடி (ரேபிஸ்) நோய் பரவலைத் தடுப்பதற்கும், நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்கலுக்கும் அரசாங்கம் ஆண்டுதோறும் 5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை செலவிடுவதாக சுகாதார அமைச்சின் வெறிநாய்க்கடி ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிரோஷன் கமகே தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையில் ஒவ்வொரு 8 பேருக்கும் ஒரு நாய் என்ற விகிதத்தில் நாய் சனத்தொகை காணப்படுவதாகவும், நாட்டில் வீட்டு மற்றும் தெரு நாய்கள் சேர்த்து 27 முதல்

Local News, News

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள்

தமிழர்களின் அறிவு மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1981 ஆம் ஆண்டு ஜூன் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில், ஆசியாவின் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 97 ஆயிரத்திற்கும் அதிகமான அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள், பழமையான கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க அறிவுச் செல்வங்கள் அழிந்தன. யாழ்ப்பாணம் பொது

Local News, News

நாடளாவிய ரீதியில் 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் அறிகுறி; பெரும்பாலானோர் மாணவர்கள்

நாடளாவிய ரீதியில் இதுவரை 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவாகியுள்ள நோயாளர்களில் பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்றினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் இருப்பதாக நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தெனியாய, ரிகில்லகஸ்கட, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளிலிருந்தே அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (31) வரையிலான நிலவரப்படி,

News, World News

சர்வதேச சந்தையில் தங்கம் உயர்வு; வெள்ளி விலையில் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,539.76 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.29 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவை ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

News, Sports News

தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் IPL கிண்ணத்தை வென்ற RCB

19வது இந்தியன் பிரிமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்த அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது. நேற்று (31) நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ்

Scroll to Top