
ஐபிஎல் 2026: RCB போட்டியின் போது நிகழ்ந்த பரபரப்பு – 48 மணிநேரத்தில் பதிலளிக்க உத்தரவு
குவஹாத்தியில் நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முகாமையாளர் ரோமி பிந்தர் கைபேசி பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, வீரர்களுக்கான ஒதுக்கப்பட்ட பகுதியில் அமர்ந்திருந்த முகாமையாளர் ரோமி பிந்தர், கைபேசி பயன்படுத்தும் காட்சிகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகின. ஐபிஎல் விதிகளின்படி, போட்டி நடைபெறும் போது ‘வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கான பகுதியில்’ கைபேசி […]









