News

Local News, News

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள்

தமிழர்களின் அறிவு மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1981 ஆம் ஆண்டு ஜூன் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில், ஆசியாவின் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 97 ஆயிரத்திற்கும் அதிகமான அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள், பழமையான கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க அறிவுச் செல்வங்கள் அழிந்தன. யாழ்ப்பாணம் பொது […]

Local News, News

நாடளாவிய ரீதியில் 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் அறிகுறி; பெரும்பாலானோர் மாணவர்கள்

நாடளாவிய ரீதியில் இதுவரை 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவாகியுள்ள நோயாளர்களில் பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்றினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் இருப்பதாக நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தெனியாய, ரிகில்லகஸ்கட, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளிலிருந்தே அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (31) வரையிலான நிலவரப்படி,

News, World News

சர்வதேச சந்தையில் தங்கம் உயர்வு; வெள்ளி விலையில் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,539.76 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.29 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவை ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

News, Sports News

தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் IPL கிண்ணத்தை வென்ற RCB

19வது இந்தியன் பிரிமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்த அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது. நேற்று (31) நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ்

News, World News

அமெரிக்க–ஈரான் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் கோரிய டிரம்ப்?

இவ்வருடத்தின் தொடக்கத்தில் வெடித்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள அமெரிக்க–ஈரான் ஒப்பந்தத்தில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை மற்றும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்புகளை அகற்றுவது தொடர்பான அம்சங்களிலேயே இந்த மாற்றங்கள் கோரப்பட்டுள்ளதாக சிபிஎஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. எனினும், இந்த தகவல்கள் குறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்நிலையில், ஈரானின்

News, World News

ஆப்கானிஸ்தானில் கோர விபத்து: அகதிகள் சென்ற லொறி கவிழ்ந்து 18 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் 10 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் உட்பட மொத்தம் 18 ஆப்கானிய அகதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜலாலாபாத் நகரத்தையும் தலைநகர் காபூலையும் இணைக்கும் லக்மேன் மாகாண நெடுஞ்சாலையில் நேற்று (30) இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானில் தங்கியிருந்த ஆப்கானிய அகதிகள் தாயகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த லொறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்ததாக லக்மேன் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மாலிக்

Local News, News

இன்று வானில் அரிய ‘நீல நிலவு’ தோற்றம்; பொதுமக்களுக்கு பார்வையிட வாய்ப்பு

பல ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றவுள்ள ‘நீல நிலவு’ (Blue Moon) எனப்படும் அரிய வானியல் நிகழ்வை இன்று (31) இரவு பொதுமக்கள் பார்வையிட முடியும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நிகழ்வு பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது சில சந்தர்ப்பங்களில் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அரிய வானியல் சம்பவமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நீல நிலவு’ என்ற பெயர் இருந்தாலும், சந்திரன்

Local News, News

செப்டம்பருடன் தற்காலிக நிவாரணங்கள் நிறுத்தம்; IMF-க்கு ஜனாதிபதி அநுர உறுதி

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கும் நிதி 100 பில்லியன் ரூபாவிற்குள் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துக்கு (IMF) உறுதியளித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், தற்போது வழங்கப்படும் அனைத்து தற்காலிக நிவாரணங்களும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நிறுத்தப்படும் என்றும், நாட்டின் நிதி

Local News, News

இன்று நள்ளிரவு முதல் அமுல்: அனைத்து முக்கிய எரிபொருட்களின் விலையும் உயர்வு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை லிட்டருக்கு 407 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு, லிட்டரொன்றின் புதிய விலை 478 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அது லிட்டருக்கு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

Astrology, News

இன்றைய ராசி பலன் 30 மே 2026

இன்று மே 30, 2026 சனிக் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 16ம் தேதி, விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சனி அருளும், புதன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் பத்ர யோகம் கிடைக்கக்கூடிய நாள். இன்று மீனம், மேஷ ராசியில் உள்ள ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று மே 30, 2026 வைகாசி மாதம் 16ம் தேதி சனிக் கிழமை, விருச்சிக ராசியில்

Scroll to Top