
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள்
தமிழர்களின் அறிவு மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1981 ஆம் ஆண்டு ஜூன் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில், ஆசியாவின் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 97 ஆயிரத்திற்கும் அதிகமான அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள், பழமையான கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க அறிவுச் செல்வங்கள் அழிந்தன. யாழ்ப்பாணம் பொது […]









