இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை லிட்டருக்கு 407 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு, லிட்டரொன்றின் புதிய விலை 478 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அது லிட்டருக்கு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.
அதேவேளை, ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 25 ரூபாயால் உயர்த்தப்பட்டு, புதிய விலை லிட்டருக்கு 495 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெயின் விலையும் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை லிட்டருக்கு 285 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
