News

News, World News

24 மணி நேரத்தில் 15 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றது – ஈரான் தகவல்

ஈரானின் அனுமதியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 15 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணம் செய்துள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், மோதல் ஆரம்பிக்கும் முன் நிலவிய அளவுடன் ஒப்பிடுகையில், இந்த கடற்பாதை வழியான கப்பல் போக்குவரத்து தற்போது சுமார் 90 சதவீதம் குறைந்துள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட ஈரானிய அதிகாரிகள், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படவில்லை என்றும், அது எதிரி நாடுகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

News, World News

மத்தியஸ்த முன்மொழிவுகளுக்கு ஈரான் பதில் தயார் – அமெரிக்கா, இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சர்வதேச மத்தியஸ்தர்கள் முன்வைத்துள்ள முன்மொழிவுகளுக்கு ஈரான் தனது பதிலைத் தயார் செய்துள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஈரானின் அரச செய்தி நிறுவனம் ‘IRNA’ உறுதிப்படுத்தியுள்ளது. மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்கா முன்வைத்த 15 அம்சங்களைக் கொண்ட சமாதானத் திட்டத்தை எந்த நிலையிலும் ஏற்க முடியாது என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “எமது தேசிய நலன்கள்

Astrology, News

இன்றைய ராசி பலன் 6 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 06, 2026 திங்கட் கிழமை, பங்குனி மாதம் 23ம் தேதி, விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கும்பத்திலிருந்து மீனத்திற்கு சனி பெயர்ச்சி நடக்கிறது. மீனத்தில் சுக்கிரன், சனி, புதன், செவ்வாய் கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. இன்று மேஷ ராசியில் உள்ள பரணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஏப்ரல் 06, 2026 பங்குனி மாதம் 23ம் தேதி திங்கட் கிழமை, விருச்சிக ராசியில் அனுஷம்

News, Sports News

ஐசிசி T20 தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னிலை – இலங்கை வீரர்களின் நிலை என்ன?

சர்வதேச கிரிக்கெட் பேரவை International Cricket Council (ICC) வெளியிட்டுள்ள ஆண்களுக்கான புதிய இருபதுக்கு 20 (T20) தரவரிசைப் பட்டியல், கிரிக்கெட் உலகில் புதிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் இந்திய இளம் வீரர்கள் தொடர்ந்து தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர். இந்திய அணியின் தொடக்கத் துடுப்பாட்ட வீரர்களான Abhishek Sharma மற்றும் Ishan Kishan ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்துள்ளனர். சமீபத்திய போட்டிகளில் இவர்களின் தாக்கத்துடனான ஆட்டமே இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய

Local News, News

யாழ். இந்துக் கல்லூரியில் 64 மாணவர்களின் சாதனை பெறுபேறுகள்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் (31.03.2026) வெளியானதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகளும் வெளியாகியுள்ளன. இதன்படி, 3A பெறுபேறுகளைப் பெற்று 64 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 64 மாணவர்கள் சாதனை இதில் உயிரியல் அறிவியல் பாடத்தெரிவில் 19 மாணவர்கள், இயற்பியல் அறிவியல் பாடத்தெரிவில் 42 மாணவர்கள், வர்த்தகப் பிரிவில் 1 மாணவர் மற்றும் கலைப் பிரிவில் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மேலும், 2A பெறுபேறுகளைப் பெற்று 31 மாணவர்கள்

Cinema, News

குடும்பத்தினருக்கே கோடிக்கணக்கில் கடன் வழங்கிய விஜய் – வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் சமீபத்தில் பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அவரது சொத்து விவரங்களும் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. தேர்தல் விதிமுறைகளின்படி தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், அவரது சொத்து மதிப்புடன், அவர் யாருக்கு யார் கடன் வழங்கியுள்ளார் என்பதற்கான தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் வெளியாகியுள்ள தகவலின்படி, விஜய் தனது குடும்பத்தினருக்கே கோடிக்கணக்கில் கடன் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அவரது மனைவி சங்கீதா விஜய் ரூ.12.60 கோடி, தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்

News, World News

ஹோர்முஸ் நீரிணையில் பெரிய மாற்றம்: சுங்கக் கட்டணம் விதிக்க ஈரான் ஒப்புதல்!

ஹோர்முஸ் நீரிணையில் கடல் போக்குவரத்துக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு ஈரான் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு, உலகளாவிய கடல் வர்த்தகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எண்ணெய் கடத்தல் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையில் இத்தகைய மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்களை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த புதிய

Local News, News

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு

இலங்கையில் நிலவி வந்த எரிவாயு பற்றாக்குறைக்கு தீர்வாக முக்கிய தகவலை லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கைக்குச் சொந்தமான 42,000 மெட்ரிக் டன் எரிவாயு இருப்பு தற்போது மாலைதீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருப்பு ஏப்ரல் மாதத்திற்கான உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் என நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், குறித்த எரிவாயு கையிருப்பை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, லாக்ஃப்ஸ்

Local News, News

எரிபொருள் மானியம் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விலை மானியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, டீசல் மற்றும் பெட்ரோல் மீதான தற்போதைய மானிய விலையிலேயே விநியோகம் தொடரவுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள மானிய முறைமையின் கீழ், ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாயையும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 20 ரூபாயையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நடைமுறைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்துள்ளதா என

Local News, News

யாழ் பருத்தித்துறையில் சடலம் கரையொதுங்கி மீட்பு – முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரை பகுதியில், முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் இன்று (31.03.2026) மீட்கப்பட்டுள்ளது. தகவல்களின் படி, உயிரிழந்த நபர் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது, குறித்த முதியவர் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேலும், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு

Scroll to Top