June 2026

Local News, News

O/L மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பெறுபேறுகள் விரைவில்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பரீட்சை விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு, பெறுபேறுகள் ஒழுங்கமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், தற்போது இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இதனால், அடுத்த வார நிறைவுக்குள் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர […]

News, World News

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகாது; ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் தயாராகி வரும் ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகாது என ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார். ஈரான் அரசு ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ஒப்பந்தம், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் மோதல் நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் அணுசக்தி

News, World News

சுவிட்சர்லாந்தில் இன்று முக்கிய வாக்கெடுப்பு; குடியேற்றக் கொள்கையில் மாற்றம் வருமா?

நாட்டின் மொத்த சனத்தொகையை ஒரு கோடிக்குள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் வாக்கெடுப்பு இன்று (14) நடைபெறுகிறது. குடியேற்றக் கொள்கை, பொதுச் சேவைகள் மீதான அழுத்தம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான சுவிட்சர்லாந்தின் உறவுகள் தொடர்பில் பரவலான அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ள இந்த வாக்கெடுப்பு, நாட்டின் எதிர்காலக் கொள்கை திசையை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. வலதுசாரி அரசியல் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி ஆதரவில் முன்னெடுக்கப்படும் இந்த முன்மொழிவு, வீட்டு வசதி,

Local News, News

யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் நேற்று (13) கைலாசபதி அரங்கில் இடம்பெற்றன. நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டில் தமிழிசை தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய்வளிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இசைத்துறையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு, தமிழிசை ஆய்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கந்தையா

Local News, News

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பு, ஜூன் 14 – கொழும்பில் இன்று நடைபெற்ற பிரமாண்ட கலாசார நிகழ்வொன்றில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி நிகழ்வாக கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர். காலி முகத்திடலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சங்கமம் குளோபல் அகாடமி மற்றும் சங்கமிழ் லியா ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச்

Local News, News

புறப்பட்ட சில நிமிடங்களில் அவசர தரையிறக்கம்: மின்னல் தாக்கத்திற்குள்ளான ஶ்ரீலங்கன் விமானம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-606 விமானம் மின்னல் தாக்கத்திற்குள்ளானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. சிவில் வானூர்தி போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, விமானம் புறப்பட்ட பின்னர் மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டு, எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள்

News, World News

அமெரிக்கா–ஈரான் பதற்றம் தணிந்ததால் கச்சா எண்ணெய் விலை சரிவு

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (12) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா ரத்து செய்ததைத் தொடர்ந்து, சந்தைகளில் நிலவிய பதற்றம் குறைந்ததே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. நேற்று (11) அமெரிக்க டொலர் 90 எல்லையைத் தாண்டியிருந்த கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, இன்று மீண்டும் அந்த மட்டத்திற்குக் கீழ் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 89.33 அமெரிக்க டொலராகவும், மர்பன்

Local News, News

தொடர்ச்சியான மழை: 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தொடர்ச்சியான மழை காரணமாக சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால் இந்த எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும், கண்டி மாவட்டத்தின் தொலுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின்

Astrology, News

இன்றைய ராசி பலன் 11 ஜூன் 2026

இன்று ஜூன் 11, 2026 வியாழக் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 28ம் தேதி மேஷ ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். குரு பகவானின் அருள் அதிகமாக கிடைக்கக்கூடிய நாள். இன்று கன்னி ராசியில் உள்ள கன்னி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை இன்று ஜூன் 11, 2026 வைகாசி மாதம் 28ம் தேதி வியாழக் கிழமை, மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன்

News, Sports News

ருமேஷ் தரங்க சாதனை: ஈட்டி எறிதலில் உலகின் 3ஆவது இடம்

. உலக தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் உலக தரவரிசையில், இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க உலக அளவில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் பங்கேற்ற அவர், 92.62 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய இலங்கை தேசிய சாதனையையும், போட்டி சாதனையையும் பதிவு செய்திருந்தார். இந்தச் சிறந்த செயல்திறனின் மூலம், ருமேஷ் தரங்க உலக தரவரிசையில் மொத்தம் 1,324 புள்ளிகளைப்

Scroll to Top