June 2026

Astrology, News

இன்றைய ராசி பலன் 4 ஜூன் 2026

இன்று 04 ஜூன் 2026 வியாழக் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 21ம் தேதி தனுசு, மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். குருவின் அருள் அதிகமாக கிடைக்கக்கூடிய நாள். இன்று ரிஷபம், மிதுனராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சுபமுகூர்த்த தினம் இன்று ஜூன் 04, 2026 வைகாசி மாதம் 21ம் தேதி வியாழக் கிழமை, தனுசு, மகர ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் […]

News, Sports News

உலக தரவரிசையில் வரலாற்றுச் சாதனை – முதல் 5 இடத்துக்குள் நுழைந்த இலங்கை வீரர் ருமேஷ் தரங்க

இலங்கையின் இளம் ஈட்டி எறிதல் நட்சத்திரமான ருமேஷ் தரங்க, உலக ஆண்கள் ஈட்டி எறிதல் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பல சர்வதேச போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான திறமையின் அடிப்படையில், அவர் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 1,287 சராசரி செயல்திறன் புள்ளிகளுடன் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மொரோக்கோவில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘ரபாத் டைமண்ட் லீக்’ போட்டியில், உலகத் தரம் வாய்ந்த வீரர்களுடன் போட்டியிட்ட ருமேஷ் தரங்க 85.97

Local News, News

நாவலப்பிட்டியில் அதிர்ச்சி விபத்து – மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலி

நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகிலிருந்த பெரிய யூக்கலிப்டஸ் மரம் திடீரென முறிந்து விழுந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (04) காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது மூன்று சக்கர வண்டியின்

News, World News

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்: நாசாவின் ‘நான்சி கிரேஸ் ரோமன்’ தொலைநோக்கி

அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (NASA) உருவாக்கியுள்ள புதிய அதிநவீன தொலைநோக்கி விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால்வெளியின் இதுவரை ஆராயப்படாத பகுதிகளில் புதிய கிரகங்களை கண்டறியும் நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘நான்சி கிரேஸ் ரோமன்’ (Nancy Grace Roman) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி, வரும் செப்டம்பர் மாதத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய இலக்காக, பால்வெளியில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத பகுதிகளில் சுமார் 1,00,000 புதிய கிரகங்களை

Cinema, News

திரைப்படக் கசிவு விவகாரம் தீவிரம் – சைபர் கிரைம் நடவடிக்கை தொடர்கிறது

தமிழக முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் நடித்ததாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. எனினும், தணிக்கைக் குழுவின் சில தடைகள் காரணமாக வெளியீடு தாமதமான நிலையில், படம் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் முழுமையாகக் கசிந்தது பெரும்

News, World News

சென்னை பள்ளிக்கரணையில் பெரும் தீ விபத்து – 100-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம்

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பரபரப்பு நிலவியுள்ளது. திடீரென ஏற்பட்ட தீ, அருகிலிருந்த வாகன நிறுத்துமிடத்துக்கும் பரவி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என்றும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தினால் ஏற்பட்ட அடர்ந்த கரும்புகை வானை மூடியதால், மேடவாக்கம் முதல் வேளச்சேரி வரை வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கரணை மற்றும்

Local News, News

பேருந்து கட்டண உயர்வு கோரிக்கை – போக்குவரத்து அமைச்சில் விசேட கலந்துரையாடல்

டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து கட்டணங்களை 5 சதவீதம் வரை உயர்த்துமாறு தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (04) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் டீசல் விலை 25 ரூபாவால் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பேருந்து உரிமையாளர்கள், தற்போதைய செலவினங்களுடன் தினசரி சேவைகளை முன்னெடுத்துச் செல்வது கடினமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலை உயர்வால் கடுமையான நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள

Local News, News

தயாளினி திலீபன் கொலை வழக்கில் புதிய தகவல் – நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்த மருத்துவத் துறை விரிவுரையாளரான தயாளினி திலீபன் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர் தனது வீட்டிலேயே கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக நீதிவான் எஸ். லெனின்குமார் தெரிவித்தார். வழக்கின் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கு எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில்

News, World News

குவைத் விமான நிலைய தாக்குதலில் காயமடைந்த 3 இலங்கையர்கள் – உடல்நிலை குறித்து தூதரகம் விளக்கம்

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த 63 பேரில் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குவைத்தின் பிரதான விமான நிலையமான T1 முனையத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போது மூன்று இலங்கையர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைக்கு குவைத்திற்கான இலங்கைத் தூதர் லக்ஷித ரத்நாயக்க மற்றும் தொழிலாளர் நலப் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று அவர்களின் நலனை விசாரித்துள்ளனர். தாக்குதல்

News, Uncategorized

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை – பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் நிலைமை எதிர்பார்ப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (04) முற்பகல் 10.30 மணி முதல் நாளை (05) முற்பகல் 10.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கடற்பரப்புகளில் காற்றின்

Scroll to Top