Search Results for: 3

Here are the search results for your search.

Local News, News

வடக்கில் ஆசிரியர் இடமாற்றம் குறித்து அதிருப்தி

2026 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தில் இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. டினோசன் கருத்து தெரிவிக்கையில், ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் அதிகாரிகள் முன்வைக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை விளக்கமாக எடுத்துரைத்தார். ஆசிரியர் இடமாற்றம் தாமதமாகும் நிலையில், அதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவதாகவும் அவர் […]

Local News, News

அத்துருகிரியவில் விபத்து: பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு

அத்துருகிரிய – கொட்டாவ வீதியில் அமைந்துள்ள பழைய சந்திப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில், உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாகச் சென்ற உந்துருளி திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள், மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்து வந்த 20 வயதுடைய மாணவரும், ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் திருத்தகத்தில் பணிபுரிந்த இளைஞரும் ஆவர். அதிகாலை 2 மணியளவில், அத்துருகிரிய நோக்கி

Local News, News

தங்க விலை நிலைமை மாற்றமின்றி தொடர்கிறது

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,075 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

News, Uncategorized

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 58 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 49 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதற்கு முன், முற்பகல் 11 மணி நிலவரப்படி,

News, World News

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் ஈரானிய கப்பல்: இந்தோனேசிய கடல் வழியாக எண்ணெய் போக்குவரத்து

அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பையும் மீறி, ‘HUGE’ எனப்படும் ஈரானிய கப்பல் இந்தோனேசியாவின் லோம்போக் நீரிணை வழியாக ரியாவு தீவுக்கூட்டத்தை நோக்கி பயணித்து வருவதாக சர்வதேச கடல்சார் கண்காணிப்பு அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த கப்பல் சுமார் 19 இலட்சம் பீப்பாய்கள் மசகு எண்ணெயை ஏற்றிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணெயின் மொத்த மதிப்பு சுமார் 220 மில்லியன் அமெரிக்க டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

Local News, News

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு இலங்கை வருகை: மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சற்று முன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறுகிறது. இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Local News, News

எரிபொருள் விலை உயர்வு தாக்கம்: முச்சக்கர கட்டண உயர்வுக்கு கோரிக்கை

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்ததாவது, பெற்றோல் விலை ரூ. 12 உயர்ந்துள்ள நிலையில் தற்போதைய கட்டண அமைப்பு தொடர முடியாது என்பதால் மாற்றம் அவசியம் என கூறினார். தற்போது மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை முச்சக்கர கட்டணங்களை நிர்ணயித்து வருகிறது.

News, World News

தர்ப்பூசணி சம்பவம் மர்மம் தீவிரம்: குடும்ப மரணத்தில் புதிய சந்தேகங்கள்

இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் தர்ப்பூசணி சாப்பிட்டதற்குப் பின்னர் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், சிகிச்சை பலனின்றி குறுகிய நேர இடைவெளியில் அனைவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை மற்றும் உணவு

Local News, News

வரி மற்றும் டொலர் உயர்வு தாக்கம்: வாகன விலை மேலும் உயரும் அபாயம்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். சமூக பாதுகாப்பு வரி 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டமை மற்றும் அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளமை காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த மாற்றம் அனைத்து வகையான வாகனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நடுத்தர மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரபல வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் எனவும்

Local News, News

தேசிய சிறுவர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்: நவீன மாற்றங்களுக்கு அரசு நடவடிக்கை

தற்போதைய சமூக மாற்றங்கள் மற்றும் உருவாகி வரும் சவால்களுக்கு ஏற்ப சட்டங்களை புதுப்பிக்கும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தை மீளாய்வு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 1998 ஆம் ஆண்டு இலக்கம் 50

Scroll to Top