
அத்துருகிரிய – கொட்டாவ வீதியில் அமைந்துள்ள பழைய சந்திப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில், உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாகச் சென்ற உந்துருளி திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள், மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்து வந்த 20 வயதுடைய மாணவரும், ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் திருத்தகத்தில் பணிபுரிந்த இளைஞரும் ஆவர்.
அதிகாலை 2 மணியளவில், அத்துருகிரிய நோக்கி மற்ற உந்துருளி பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த இருவரும் உடனடியாக ஹோமாகம ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
