
லெபனானில் மதச் சிலை அவமதிப்பு புகைப்படம்: இஸ்ரேல் வீரர் சர்ச்சையில் சிக்கல்
லெபனான்–இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், லெபனானில் நிலை கொண்டுள்ள இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பொதுமக்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதும், கொள்ளையடிப்பதும் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அண்மையில் தபெல் நகரில், இராணுவ சீருடை அணிந்த ஒருவர் இயேசு கிறிஸ்து சிலையை உடைக்கும் காட்சி வைரலானது. அதே நகரில் தற்போது கன்னி மரியாள் சிலை அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு புகைப்படம் […]









