
தமிழக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரசியல் சூழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்யக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தற்காலிக சபாநாயகர் பதவி காரணமாக வாக்குரிமை குறைபாடு ஏற்படலாம் என்பதால், ஆட்சியமைக்க கூடுதலாக சுமார் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதற்காக த.வெ.க.க்கு நான்கு சாத்தியமான கூட்டணி வழிகள் பேசப்படுகின்றன:
முதல் வழியாக காங்கிரஸ், பா.ம.க. மற்றும் சில இடதுசாரி அல்லது சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு பெறுதல்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வழிகளில் இடதுசாரி கட்சிகள், முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிகள் பரிசீலனைக்குள் வருகின்றன.
நான்காவது வழியாக அ.தி.மு.க.வின் நேரடி ஆதரவு பெறும் வாய்ப்பும் குறிப்பிடப்படுகிறது.
ஆனால் அ.தி.மு.க. ஆதரவு கிடைத்தால் அமைச்சரவை பங்கீடு உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகள் முன்வைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த அனைத்து வாய்ப்புகளிலும் இறுதி முடிவு த.வெ.க. தலைவர் விஜய் எடுப்பதே முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
