World News

News, World News

அமெரிக்கா–ஈரான் பதற்றம் உச்சத்தில்: இராணுவ முற்றுகை, உலக அரசியலில் அதிர்ச்சி அலை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானைச் சுற்றியுள்ள இராணுவ முற்றுகை அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச அரசியலில் பதற்றம் உச்சநிலையை எட்டியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை மற்றும் ட்ரம்ப்பின் நிலைப்பாடுஅமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஈரானிய துறைமுகங்களை இலக்காகக் கொண்டு இராணுவ முற்றுகை செயல்பாட்டில் உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், ஈரான் சமரச பேச்சுவார்த்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் திறந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானின் எதிர்வினை மற்றும் மக்கள் போராட்டம்அமெரிக்காவின் […]

News, World News

“அமைதிக்காகக் குரல் கொடுக்க அஞ்சமாட்டேன்”: ஜனாதிபதி ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்கு போப் லியோ பதிலடி!

ஈரான் போர் விவகாரத்தில் வத்திக்கான் மற்றும் வெள்ளை மாளிகைக்கு இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட விமர்சனங்கள் குறித்து போப் லியோ XIV தனது அதிரடியான பதிலை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், போப் லியோ “குற்றங்களுக்கு எதிராக மென்மையானவர்” என்றும், அவர் ஒரு “தீவிர இடதுசாரி” போலச் செயல்படுவதாகவும் சாடியிருந்தார். மேலும், போப் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், போப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப்

News, World News

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நெருக்கடி தீவிரம்: டீசல் விலை உயர்வால் போக்குவரத்துத் துறை திணறல்

ஈரான் போர் காரணமாக உலகளவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மசகு எண்ணெய் விலை உச்சத்தை எட்டிய நிலையில், அவுஸ்திரேலியா கடுமையான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நீண்டதூரப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் ‘ரோட் ட்ரெயின்கள்’ எனப்படும் பெரிய பாரவூர்திகள், டீசல் விலை அதிகரிப்பால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன. போருக்கு முன்பு ஒரு லிட்டர் டீசல் 180.2 சென்ட் இருந்த நிலையில், தற்போது அது 312.7 சென்ட்டாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையும் 171 சென்ட்டில் இருந்து 240.1 சென்ட்டாக அதிகரித்துள்ளது.

News, World News

அந்தாடிக்காவின் “ஆபத்தான வலயத்தில்” புதிதாக கண்டறியப்பட்ட மர்மத் தீவு!

அந்தார்டிக்காவின் வடமேற்கு வெடெல் கடல் பகுதியில், எகிப்தின் கிசா பிரமிடு அளவுக்கு ஒப்பிடத்தக்க புதிய தீவு ஒன்றை சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. ‘போலார்ஸ்டெர்ன்’ எனப்படும் பனிக்கப்பலில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் ஆய்வில் ஈடுபட்டிருந்த 93 பேர் கொண்ட குழுவினர், கடும் புயல் காரணமாக ஒரு பகுதியில் தற்காலிகமாக தஞ்சமடைந்தபோது இந்த நிலப்பரப்பைக் கவனித்தனர். முதலில், இது ஒரு “அழுக்கடைந்த பனிப்பாறை” (Dirty Iceberg) என தவறாக கருதப்பட்டது. ஆனால் பின்னர் ட்ரோன் ஆய்வுகள்

News, World News

ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்படும் – ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகின் முக்கியமான கடல் வணிக வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று கடுமையாக தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு முன்னெடுக்கிறது. பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், ஈரான் அணு

News, World News

இஸ்லாமாபாத்தில் பள்ளிகள், வணிக வளாகங்கள் மூடல்.. நாளை அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை..!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஏப்ரல் 11 முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது. இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் நகரம் தற்போது ஒரு பலத்த பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள ‘ரெட் ஜோன்’ பகுதிக்குள் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.  நகரம் முழுவதும் ஆயுதம் ஏந்திய

News, World News

வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவு பயணத்தின் பின் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II

நிலவைச் சுற்றி வரும் தனது 10 நாள் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நாசாவின் ஓரியன் விண்கலம் கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையை ஒட்டிய பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஓரியன் விண்கலம் கடலில் தரை இறங்கியது. வளிமண்டலத்திற்குள் நுழையும் போது சுமார் 6 நிமிடங்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விண்கலம் பாதுகாப்பாக மேகமூட்டங்களுக்கு இடையே பாராசூட்டுகள் மூலம் மெதுவாகக் கடலில் இறங்கியது. அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜான் பி.

News, Uncategorized, World News

உலகமே உற்றுநோக்கும் சந்திப்பு – ஈரானுடன் சமரசம் செய்யத் தயாராகிறதா அமெரிக்கா?

ஈரானுடன் மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) பாகிஸ்தானுக்குப் பயணமாகியுள்ளார்.நாளை (11) இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அவர் விடுத்துள்ள செய்தியில், ஈரான் நல்லெண்ணத்துடன்செயற்படுமானால், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களுக்குப் போக்குவரத்து கட்டணத்தை அறவிடும் ஈரானின் தீர்மானம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச எரிசக்தி

Local News, News, World News

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (09.04.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 319.08 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416.02 ஆகவும் விற்பனைப் பெறுமதி 428.86 ஆகவும் பதிவாகியுள்ளது. நாணயமாற்று விகிதம் யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362.12 ஆகவும் விற்பனைப் பெறுமதி 373.70 ஆகவும் பதிவாகியுள்ளது. கனேடிய

News, World News

24 மணி நேரத்தில் 15 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றது – ஈரான் தகவல்

ஈரானின் அனுமதியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 15 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணம் செய்துள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், மோதல் ஆரம்பிக்கும் முன் நிலவிய அளவுடன் ஒப்பிடுகையில், இந்த கடற்பாதை வழியான கப்பல் போக்குவரத்து தற்போது சுமார் 90 சதவீதம் குறைந்துள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட ஈரானிய அதிகாரிகள், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படவில்லை என்றும், அது எதிரி நாடுகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Scroll to Top