
பிலிப்பைன்ஸ் அருகே சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை வெளியீடு
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மிண்டானாவோ தீவுக்கு அருகில் இன்று (8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் ஆழிப்பேரலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GFZ) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் 8.2 ரிக்டர் அளவாக மதிப்பிடப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் வலிமை பின்னர் 7.8 ரிக்டர் அளவாக திருத்தப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவின் புவியியல் […]









