
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையில் முறைகேடுகள்: ஐசிசியுடன் கலந்தாலோசிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் முடிவு!
பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து விரிவான விசாரணைகள் தொடங்கப்படவுள்ளதாக அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் அமினுல் ஹக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற பிசிபி தேர்தல்களில் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் செயல்முறைகளில் தலையீடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு மார்ச் 11 அன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவை அமைத்தது அரசின் நேரடி தலையீடு என பிசிபி குற்றம்சாட்டியிருந்தாலும், முன்னாள் அரசாங்கமே கிரிக்கெட் சபை தேர்தல்களில் […]

