News

News, Uncategorized

தமிழர்களின் நலனில் இந்தியா உறுதி – நுவரெலியாவில் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று நுவரெலியா – ராகலை பகுதியில் அமைந்துள்ள லிட்டஸ்டேல் பெருந்தோட்டத்திற்கு விஜயம் செய்தார். அங்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளைப் பார்வையிட்ட அவர், பயனாளிகளுடனும் நேரடியாக கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது இந்திய வம்சாவளி தமிழ் மக்களைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த அவர், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் மற்றும் […]

Local News, News

கட்டுமானத் துறையில் ஆள் பற்றாக்குறை – 10,000 இளைஞர்களுக்கு அரசு பயிற்சி திட்டம்!

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், 10,000 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் பயிற்சி திட்டம் இலங்கை இராணுவத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் டி.பி. சரத், கட்டுமான நிறுவனங்களுடன் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், “கட்டுமானப் பணியாளர்” என்ற பதவியை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக தரப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். தற்போது இந்தத் துறையில் சுமார்

News, Sports News

ஐபிஎல் மைதானத்தில் ‘சூனிய’ சர்ச்சை? – எலுமிச்சை காணொளி வைரல்

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், போட்டிக்குப் பிறகு மைதானத்தில் பதிவான ஒரு காணொளி புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. அந்தக் காணொளியில், ஐதராபாத் அணியின் ரசிகர் ஒருவர் கையில் எலுமிச்சை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு சடங்கு செய்வது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை சிலர் ‘சூனியம்’ எனக் கூறி, சிஎஸ்கே வீரர்களின் விக்கெட்டுகளை பாதிக்க முயற்சி என

Local News, News

நுவரெலியா வீதியில் அதிர்ச்சி: 50 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரம், மூவரின் நிலை கவலைக்கிடம்!

நுவரெலியா பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில், முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சிக்கியுள்ளனர். அவர்களில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் கடுமையாக காயமடைந்து உடனடியாக வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கர வண்டியை இயக்கியது மூத்த

News, World News

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சர்வதேச சந்தையில் அதிரடி ஏற்றம்

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் பதற்றமான நிலையும் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (19) குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்துள்ளன. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,831.23 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் 80.83 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு உலக அரசியல் சூழ்நிலைகளும், அமெரிக்க டொலரின் வலுவூட்டலும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கு பகுதியில்

Local News, News

நாளை முதல் வானிலையில் மாற்றம்: 7 மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை

நாளை (20) முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை மற்றும் பிற்பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், மத்திய, சபரகமுவ, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களுடன் சேர்த்து காலி, மாத்தறை மாவட்டங்களிலும்

News, Uncategorized

உத்தியோகபூர்வ விஜயம்: இந்திய துணை ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்துள்ளார். இந்திய வான் படைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, அவருடன் 49 பேர் கொண்ட உயர்மட்ட தூதுக்குழுவும் நாட்டுக்கு வருகை தந்துள்ளது. இவ்விழாவின் போது இருநாட்டு உறவுகள் மற்றும் பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய சந்திப்புகள் நடைபெற உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Local News, News

செல்வம் பெருகும் நாள்: அட்சய திருதியையில் தங்கம் வாங்க சரியான நேரம் இதோ!

செல்வம் பெருகும் நாளாக கருதப்படும் அட்சய திருதியை இன்று (ஏப்ரல் 19) பக்தி உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. “அட்சயம்” என்றால் குறையாதது என்று பொருள்; இந்த நாளில் தொடங்கும் நற்செயல்கள் மற்றும் வாங்கப்படும் பொருட்கள் தொடர்ந்து வளர்ச்சி பெறும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டிற்கான முக்கிய நேர விவரங்கள்: இந்த ஆண்டு சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் உச்ச நிலையில் இருப்பதால் ‘அட்சய யோகம்’ உருவாகியுள்ளது. இதனால் இந்த நேரத்தில் தொடங்கும் முதலீடுகள், புதிய வணிகங்கள்

Local News, News

மஹரகம தீ விபத்து: தாய்–மகள் உயிரிழப்பு ,இருவர் மருத்துவமனையில் அனுமதி!

மஹரகம, பமுணுவ வீதியில் அமைந்துள்ள வாடகை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 55 வயதுடைய தாயும், 16 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில், காயமடைந்த பெண்ணின் கணவரும், 76 வயதுடைய வீட்டின் உரிமையாளரும் பலத்த தீக்காயங்களுடன் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், இது திட்டமிட்ட தாக்குதல் அல்லது கொலை சம்பவமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான

News, World News

எச்-1பி விசாவில் பெரிய மாற்றம்: கட்டண உயர்வால் விண்ணப்பங்கள் குறைவு

அமெரிக்காவின் எச்-1பி (H-1B) விசா திட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. விசா கட்டணம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 90 லட்சமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. எச்-1பி விசா ஆண்டுதோறும் 85,000 பேருக்கு வழங்கப்படுகிறது. முன்பாக இந்த விசாவிற்கான தேர்வு லொட்டரி முறையில் நடைபெற்றாலும், புதிய விதிகளின் கீழ் உயர் ஊதிய வேலைகளுக்குத் தகுதியானவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக, லொட்டரி முறையில் சிலருக்கு பல முறை வாய்ப்பு

Scroll to Top