
மஹரகம, பமுணுவ வீதியில் அமைந்துள்ள வாடகை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 55 வயதுடைய தாயும், 16 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், காயமடைந்த பெண்ணின் கணவரும், 76 வயதுடைய வீட்டின் உரிமையாளரும் பலத்த தீக்காயங்களுடன் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், இது திட்டமிட்ட தாக்குதல் அல்லது கொலை சம்பவமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
