News

Health & Beauty Tips, News

சன்ஸ்கிரீன் பயன்பாட்டின் முக்கியத்துவம்: இளம் வயதினர்கள் செய்யும் பொதுவான தவறுகள்

Sunscreen important for youngsters: இளம் வயதில் வயதான தோற்றம், டானிங், பிக்மெஷன்டேஷன் போன்ற பிரச்சனைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் அவசியமாகும். இளைஞர்கள் எந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம், எவ்வளவு SPF அளவு நல்லது, பலரும் செய்யும் சன்ஸ்கிரீன் தவறுகள் போன்ற விவரங்களை சரும மருத்துவர் விளக்கியுள்ளார் பல இளைஞர்கள் சன்ஸ்கிரீன் என்பது கடற்கரை பயணம் அல்லது சுற்றுலா செல்லும்போது பயன்படுத்த வேண்டிய ஒன்றாக கருதுகின்றனர். ஆனால், வேலைக்கு செல்லும்போது, கல்லூரிக்கு நடந்து செல்லும்போது அல்லது வெளியில் […]

News, World News

அமெரிக்கா – ஈரான் இடையில் புதிய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நாளை இஸ்லாமாபாத்தில்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நாளை புதன்கிழமை (22) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளதாக இரண்டு அதிகாரிகள் எசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.தற்போது நடைமுறையிலுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளன. மறுபுறம், இந்த பேச்சுவார்த்தையில்  ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில்

Cinema, News

கரூர் சம்பவம் குறித்து விஜய் வேதனை: “என் மீது ஏன் இத்தனை வஞ்சம்?”

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் பிரசார நிகழ்வின்போது ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, அந்தக் கட்சியின் தலைவர் Vijay தனது ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கரூரில் உள்ள மக்களிடம் கேட்டாலே உண்மை வெளிவரும் எனக் கூறிய அவர், உண்மை நிலைமை அப்படியிருக்கையில் தன் மீது ஏன் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். “நாங்கள் அரசியலே செய்ய மாட்டோம்” என முன்பு வெளியிடப்பட்ட காணொளியை குறிப்பிட்ட

Local News, News

நீர்கொழும்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், வணிக விசாவில் இலங்கைக்கு வந்து அதன் காலம் முடிந்தபின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்களை கைது செய்துள்ளனர். Negombo பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் இவர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் 47 பேர்  சீனநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள மூவர் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைப் பற்றிய மேலதிக விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தொடர்ந்து

Local News, News

ஏப்ரல் மாத அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிகளில் செலுத்தல்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவுகள் நாளை (22) வங்கிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 முதியவர்களுக்கும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 72,525 முதியவர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன. தகுதி பெற்ற பயனாளிகள் தங்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் நாளை முதல் இந்த தொகைகளைப் பெற முடியும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Cinema, News

இலங்கைக்கு திடீர் வருகை தந்த சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி – ரசிகர்கள் உற்சாகத்தில்!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான சூர்யா மற்றும் நடிகர்-இயக்குநரான ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இன்று திடீரென இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி நிகழ்ந்த இந்த பயணம் ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் வருகையின் நோக்கம் குறித்து இதுவரை இருவரின் தரப்பிலிருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இவர்கள் Colombo நகரில் உள்ள ஒரு நட்சத்திர தரமான ஹோட்டலில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில்

News, World News

போர் பதற்றம் தீவிரம்: ஹோர்முஸ் நீரிணை கப்பல் விவகாரம் – அமெரிக்க பேச்சுக்கு ஈரான் மறுப்பு

அமெரிக்காவுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் மோதல் சூழ்நிலை மற்றும் போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களே இந்த முடிவுக்குக் காரணம் என ஈரான் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அந்தப் பகுதியில் ஈரானிய சரக்குக் கப்பல் அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டதையும், கடல்சார் முற்றுகை தொடர்வதையும் ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. ‘டூஸ்கா’ எனப்படும் ஈரானிய கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை

Local News, News

விக்டோரியா நீர்த்தேக்க நீர் வீணாகிறதா? – குற்றச்சாட்டுகளை மறுத்த நீர்ப்பாசனத் திணைக்களம் விளக்கம்

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகள் தன்னிச்சையாக நீரை வெளியேற்றி வருவதாக தேசிய விவசாய ஒருமைப்பாடு குற்றம் சாட்டியுள்ளது. இந்நடவடிக்கைகள் நாட்டின் எதிர்கால உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. தேசிய விவசாய ஒருமைப்பாட்டின் தலைவர் அநுராத தென்னகோன் கருத்து தெரிவிக்கையில், எதிர்கால விவசாய தேவைகளுக்காக நீரை சேமிக்க வேண்டிய நிலையில், அதிகாரிகள் குறுகிய கால நோக்கத்துடன் நீரை வீணடித்து வருவதாக தெரிவித்தார். விவசாய தேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத சூழலிலும், குளங்களில்

Astrology, News

இன்றைய ராசி பலன் 20 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 20, 2026 திங்கட் கிழமை, பங்குனி மாதம் 07ம் தேதி, ரிஷபம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். மீனத்தில் சனி, புதன், செவ்வாய் கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. இன்று சுக்கிரனின் பெயர்ச்சி நடக்கிறது. துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று 20 ​ஏப்ரல் 2026 பங்குனி மாதம் 07ம் தேதி திங்கட் கிழமை, ரிஷப ராசியில் கிருத்திகை பின் ரோகிணி நட்சத்திரத்தில்

Local News, News

பூக்கள் அல்ல… தோட்டத்தின் அழகே வருமானம்! – வைரலாகும் விவசாயியின் ஐடியா

சந்தையில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழலில், தனது தோட்டத்தின் இயற்கை அழகையே வருமானமாக மாற்றி புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தமிழகத்தின் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி. அவர் தனது நிலத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்திருந்தார். தற்போது தோட்டம் முழுவதும் மஞ்சள் நிற சூரியகாந்தி பூக்களால் காட்சியளித்தாலும், சந்தையில் அவற்றிற்கு போதிய விலை கிடைக்காததால் சாகுபடி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பூக்களை குறைந்த விலையில் விற்பனை செய்து நஷ்டமடைவதை

Scroll to Top