
பொதுநலவாய பொதுச் செயலாளருடன் பிரதமர் சந்திப்பு
லண்டனில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் காலநிலை விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் Shirley Ayorkor Botchweyயை லண்டனிலுள்ள மார்ல்பரோ மாளிகையில் நேற்று (21) சந்தித்து கலந்துரையாடினார். லண்டனில் இன்று ஆரம்பமான ‘கற்றலுக்கான பொதுநலவாய’ அமைப்பின் 43ஆவது ஆளுநர் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பொதுநலவாயக் கட்டமைப்பிற்குள் இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்து விரிவாகப் […]









