Local News

Local News, News

மத்திய கிழக்கு நெருக்கடிக்கும் மத்தியிலும் தேங்காய் ஏற்றுமதியில் முன்னேற்றம்

கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களால் கடல்வழிப் போக்குவரத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் காணப்பட்ட போதிலும், ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது. இந்த சவால்களை சமாளிப்பதற்காக, ஏற்றுமதியாளர்கள் மாற்று போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தியதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறிப்பாக, தேங்காய் மற்றும் […]

Local News, News

இலங்கையில் இன்று உயர்ந்த தங்க விலை

இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ரூ.5,000 அதிகரிக்கப்பட்டு ரூ.386,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலையும் ரூ.5,000 அதிகரித்து ரூ.355,200 ஆக உயர்ந்துள்ளது. இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.48,250 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.44,400 ஆகவும் விற்பனை

Local News, News

மீன் சந்தையில் மீன் விலை சரிவு: வரத்து அதிகரிப்பால் பொதுமக்களுக்கு நிவாரணம்

பேலியகொடை மத்திய மீன் சந்தையில் பல்வேறு மீன் வகைகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகள், தற்போது குறைந்த விலையில் சந்தைக்கு வந்துள்ளதாக மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அண்மையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சாளை மீனின் மொத்த விலை தற்போது 400 ரூபாவாகக் குறைந்துள்ளது. மேலும், ஒரு கிலோ பலயா மற்றும் லின்னா மீன்கள் தற்போது 900 ரூபாவிற்கு மொத்த

Local News, News

TIN இலக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) தமக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் எளிதாக சரிபார்க்க முடியும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணை உள்ளிடுவதன் மூலம் TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்றார். இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு

Local News, News

டெங்கு நோயாளிகள் 15 ஆயிரத்தைத் தாண்டினர்: உடனடி முன்னெச்சரிக்கையை வலியுறுத்தும் சுகாதாரத் துறை

நாட்டில் டெங்கு நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் சிரேஷ்ட பதிவாளரும் சமூக மருத்துவருமான அஹ்மட் ஷியாம் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஈடிஸ் வகை நுளம்புகள் தேங்கி நிற்கும் சுத்தமான நீரிலேயே முட்டையிடுகின்றன. இந்த முட்டைகள் 7 முதல் 10 நாட்களுக்குள் முழுமையான நுளம்புகளாக வளர்ச்சியடைகின்றன. பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள், சொப்பின் பைகள், கூரைகளின்

Local News, News

இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு குறித்து பிரதமருடன் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள் ஆலோசனை

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (24) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது, 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள “இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு (SLEIS 2026)” தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI)

Local News, News

தில்லையடியில் வேன்–முச்சக்கரவண்டி மோதி விபத்து: 5 பேர் காயம்

புத்தளம் மாவட்டத்தின் தில்லையடி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரத்திற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு நீர்கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியுடன் மோதியதுடன், பின்னர் அருகிலிருந்த கட்டடமொன்றிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தில்லையடி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேனின் முன்பாக கார் ஒன்று திடீரென வீதியைக் குறுக்கே கடந்துள்ளது. அதனைத் தவிர்க்க முயன்றபோது வேன் சாரதி வாகனத்தின்

Local News, News

சோளங்கந்தை தோட்டத்தில் துயரச் சம்பவம்; பெண் தொழிலாளர் மரணம்

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தேயிலை பறித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த பெண்ணை பாம்பு கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த ஏனைய தொழிலாளர்கள் உடனடியாக அவரை நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம்

Local News, News

டெங்கு அபாயம் முன்கூட்டியே தெரிந்தும் நடவடிக்கையில் தாமதம்; சங்கம் குற்றச்சாட்டு

டெங்கு பரவல் அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன கூறுகையில், ஜனவரி மாதம் முதல் டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தியைக் காட்டும் பிரெடோ சுட்டெண் தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததாகவும், ஏப்ரல் மாதமளவில் நாட்டின் பல பகுதிகளில் அது 25 சதவீதத்தைத் தாண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை தொடர்பாக ஏப்ரல்

Local News, News

பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பெயரில் பண மோசடி; மக்கள் அவதானம் தேவை

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்தி, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பணம் மோசடி செய்யும் குழுவொன்று இயங்கி வருவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு ஒழிப்பு தொடர்பான தற்போதைய பரிசோதனை நடவடிக்கைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அச்சுறுத்தி பொதுமக்களிடம் பணம் கோரும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தங்களது உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொள்ளும் போது

Scroll to Top