
காணாமல் போன 4 கடற்றொழிலாளர்களை தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்று காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடயத்தை கடற்படை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 27 ஆம் திகதி இரவு சுமார் 11 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற குறித்த கடற்றொழிலாளர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களை கண்டறியும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடற்றொழிலாளர்கள் பயணித்திருக்கக்கூடிய திசைகள் தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் […]









