
கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் பலி
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். தெற்கு அதிவேக வீதியின் 54.9 கிலோமீற்றர் மைல்கல்கலுக்கு அருகில் கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று, முன்னால் சென்ற சிமெந்து ஏற்றிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பின்னால் வந்த லொறியின் சாரதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்தனர். திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 62 மற்றும் 64 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்தனர். […]









