
ஹொரணை தீ விபத்தைத் தொடர்ந்து முதியோர் இல்லங்களுக்கு கடும் கண்காணிப்பு
நாடு முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் 455 முதியோர் இல்லங்கள் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 10,000-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், பல முதியோர் இல்லங்கள் இதுவரை […]









