Local News

Local News, News

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.  தெற்கு அதிவேக வீதியின் 54.9 கிலோமீற்றர் மைல்கல்கலுக்கு அருகில் கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று, முன்னால் சென்ற சிமெந்து ஏற்றிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் பின்னால் வந்த லொறியின் சாரதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்தனர்.  திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 62 மற்றும் 64 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.  […]

Local News, News

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி தீர்மானம்

மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. அண்மைய மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தின் போது, நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது வேறு ஏதேனும் நியாயமற்ற செலவுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன், எதிர்கால மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளிலிருந்தும் நிலக்கரி நெருக்கடி தொடர்பான மேலதிக

Local News, News

கரதியான குப்பை மேட்டுத் தீ: அணைக்கும் பணியில் பெல் 412 வானூர்தி இணைப்பு

போகுந்தர – கரதியான குப்பை மேட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை விமானப்படையின் பெல் 412 வானூர்தி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ வேகமாக பரவாமல் தடுக்கும் நோக்கில், மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்களத்திற்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக

Local News, News

புத்தாண்டு காலத்தில் மதுபான விற்பனைக்கு தற்காலிக கட்டுப்பாடு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி ஆணையாளருமான ஏ.ஏ. ரொஷான் பெரேரா வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் அனுமதியுடன் அமுல்படுத்தப்படும் இந்த உத்தரவின் அடிப்படையில், மதுபான விற்பனைக்கு உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களும் குறித்த இரண்டு நாட்களிலும் செயல்படக்கூடாது. இதில் வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள், பார்கள், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களில்

Local News, News, World News

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (09.04.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 319.08 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416.02 ஆகவும் விற்பனைப் பெறுமதி 428.86 ஆகவும் பதிவாகியுள்ளது. நாணயமாற்று விகிதம் யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362.12 ஆகவும் விற்பனைப் பெறுமதி 373.70 ஆகவும் பதிவாகியுள்ளது. கனேடிய

Local News, News

இ.போ.சபைக்கு தினசரி ரூ.20 மில்லியன் இழப்பு – அமைச்சர் கடும் நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெறும் மோசடி செயல்பாடுகள் காரணமாக, தினமும் சுமார் ரூபாய் 20 மில்லியன் வரை நட்டம் ஏற்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த இழப்பு பொதுமக்களின் பணத்தில் ஏற்படும் பெரிய வீணாக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பேருந்து சேவைகள் மட்டுமன்றி, சபையின் நிர்வாக மற்றும் மனிதவள அமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார். இலங்கை போக்குவரத்து சபையை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் தெளிவுபடுத்தினார். அதை

Local News, News

தொழிலாளர்களுக்கான சமையல் எரிவாயு வழங்கல் இரட்டிப்பு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ கிராம் LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வழங்கலை இரட்டிப்பாக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது. மக்கள் அடர்த்தி அதிகமான நகரங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமையல் சிக்கல்களைத் தணிப்பதுடன், அவர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நிலையைத் தவிர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். 2026 மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பதிவான தினசரி சராசரி விநியோக அளவுகளை

Local News, News

மத்திய கிழக்கு பதற்றம்: மீனவர்களுக்கு நிவாரண கொடுப்பனவு திட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றநிலையால் உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்ததுடன், விநியோக சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதன் தாக்கமாக நாட்டின் மீன்பிடித் துறை கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலைமையை முன்னிட்டு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதி இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. மீன்பிடித் தொழிலை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரவும், மீனவ சமூகத்தின் பொருளாதார சுமையை குறைக்கவும், அவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குவது குறித்து

Local News, News

கொழும்பு பங்குச் சந்தையில் சிறிய உயர்வு – ASPI முன்னேற்றம்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய (06) வர்த்தக நடவடிக்கைகள் சிறிய முன்னேற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 9.18 புள்ளிகளால் உயர்வு கண்டுள்ளது. இதன் விளைவாக, மொத்த சுட்டெண் 0.04% அதிகரித்து 21,126.60 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய மொத்த வர்த்தகப் புரள்வானது சுமார் 3 பில்லியன் ரூபாயாக இருந்தது. கடந்த சில நாட்களாக சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கிடையில், இன்றைய இந்த நேர்மறை முன்னேற்றம் முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

Local News, News

யாழ். இந்துக் கல்லூரியில் 64 மாணவர்களின் சாதனை பெறுபேறுகள்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் (31.03.2026) வெளியானதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகளும் வெளியாகியுள்ளன. இதன்படி, 3A பெறுபேறுகளைப் பெற்று 64 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 64 மாணவர்கள் சாதனை இதில் உயிரியல் அறிவியல் பாடத்தெரிவில் 19 மாணவர்கள், இயற்பியல் அறிவியல் பாடத்தெரிவில் 42 மாணவர்கள், வர்த்தகப் பிரிவில் 1 மாணவர் மற்றும் கலைப் பிரிவில் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மேலும், 2A பெறுபேறுகளைப் பெற்று 31 மாணவர்கள்

Scroll to Top