Local News

Local News, News

எரிவாயு தட்டுப்பாடு இல்லை: புத்தாண்டுக்கு பின் மீண்டும் விநியோகம்

புத்தாண்டு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இதனை சூரியன் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார். அதற்கமைய, மே மாதம் வரை தேவையானளவு எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், லாஃப்ஸ் எரிவாயு விநியோகமும் இன்று முதல் வழமை […]

Local News, News

மீண்டும் நகருக்கு மக்கள் திரும்பல் – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சித்திரை புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த மக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், இன்று (15) பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் காலி–பின்னதுவ நுழைவாயிலில் காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிந்தது. நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் அவ்வப்போது நெரிசல் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இன்று முதல் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக

Local News, News

கற்பிட்டியில் கடத்தல் முயற்சி முறியடிப்பு – சந்தேக நபர் கைது

கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் முந்திரியம்பருப்பு பெருந்தொகையுடன் பாரவூர்தி ஒன்றில் பயணம் செய்த நபர் ஒருவரை கற்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாச்சிகல்லி பகுதியில் நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. கற்பிட்டி காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், பாரவூர்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 742 கிலோகிராம் மஞ்சளும், 800 கிலோகிராம் முந்திரியம்பருப்பும் பறிமுதல் செய்யப்பட்டன. மீட்கப்பட்ட பொருட்களின் மொத்த

Local News, News

வெளிநாடொன்றில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரி மீது விமானி கடுமையான தாக்குதல்

தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி மற்றும் ஒரு விமானி இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்துக்கான நிறுவன பொறுப்பதிகாரியான அமிதாப் அந்தனிபிள்ளை மற்றும் UL403 விமானத்தின் விமானி ஆகியோருக்கிடையே இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட விமானத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் போது ஏற்பட்ட வாய்த்தகராறு கடுமையான மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதன்போது விமானி

Local News, News

ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பிறந்துள்ள இந்தச் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். பாரம்பரிய

Local News, News

அதிவேக நெடுஞ்சாலையில் 3 நாட்களில் அதிகரித்த வருமானம்!

கடந்த 10ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்களில், அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்திய வாகனங்களின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை ரூ.163,291,065 வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த காலப்பகுதியில் மொத்தம் 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன. இதில், அதிகபட்ச வாகனப் போக்குவரத்தும் வருமானமும் 10ஆம் திகதியிலேயே பதிவாகியுள்ளது. அன்றைய தினம் மட்டும் 161,847 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், ரூ.59,815,450 வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Local News, News

யாழில் புத்தாண்டு வேகம்; ஒன்றை ஒன்று உரசிய பேருந்துகள்!

 யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு வேகத்தில் ஒன்றை ஒன்று முந்த முறப்பட்டபோது இரு பேருந்துகள் உரசி விபத்து சம்பவத்துள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை 9.15 மணியளவில் மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது. காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தும் அரச பேருந்தும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முற்பட்ட நிலையில் இரு பேருந்துகளும் விபத்தில் சிக்கியது. தனியார் பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட அரச பேருந்து முன்னால் வந்த மகிழுந்துக்கு இடம் கொடுக்க

Local News, News

வெற்றிலை விலை அதிகரிப்பு

 நாட்டில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெற்றிலைக்கு அதிக தேவை உள்ள நிலையில், வெற்றிலையின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி, சந்தையில் ஒரு கைப்பிடி வெற்றிலையின் விலை சுமார் ரூ. 400-ஐ எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சிறிய கைப்பிடி வெற்றிலை சுமார் ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வறண்ட காலநிலை காரணமாக வெற்றிலை அறுவடை குறைந்ததும் வெற்றிலை விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. அதேவேளை சித்திரை புத்தாண்டில் வெற்றிலைக்கு முக்கியத்துவம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Local News, News

புத்தாண்டு காலத்தில் சமூக ஊடக பாவனையில் கவனம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, இந்த விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாங்கள் வீட்டில் இல்லை என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவது திருடர்களுக்குச் சாதகமாக அமையும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். எனவே, சுற்றுப்பயண அனுபவங்களை மீண்டும் வீடு திரும்பிய பின்னரே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு

Local News, News

பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள்

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடப்படும் பேருந்துகள் குறித்து 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார்.  பண்டிகைக் காலங்களில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் இருக்கக்கூடும் எனவும், அத்தகைய பேருந்துகள் பயணிகளைச் சுரண்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அவ்வாறு அனுமதிப்பத்திரம் இன்றி

Scroll to Top