Local News

Local News, News

இலங்கை கடற்பரப்பை பாதுகாக்க புதிய டிஜிட்டல் தளம்: அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை கடற்பரப்பில் ஏற்படக்கூடிய எண்ணெய் மற்றும் அபாயகரமான இரசாயன கசிவுகளால் உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் புதிய தேசிய செயற்திட்டம் மற்றும் டிஜிட்டல் தளத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள முக்கிய கிழக்கு-மேற்கு கடல் வர்த்தகப் பாதையில் தினசரி 400-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிப்பதுடன், ஆண்டுதோறும் 5,000-க்கும் அதிகமான கப்பல்கள் உள்ளூர் துறைமுகங்களை வந்தடைகின்றன. இதனுடன் துறைமுக விரிவாக்கம், எண்ணெய் சார்ந்த நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவை கடல்சார் அபாயங்களை […]

Local News, News

ஒரே மாதத்தில் ரூ.427 அதிகரிப்பு; கொழும்பில் அதிகபட்சம், மொனராகலையில் குறைந்தபட்சம்

இலங்கையில் ஒரு நபர் தனது அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மாதமொன்றுக்கு குறைந்தபட்சமாக 17,117 ரூபா செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 ஏப்ரல் மாத உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு அறிக்கையின்படி, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் வறுமைக் கோட்டின் மதிப்பு 427 ரூபாவால் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நபருக்கான குறைந்தபட்ச வாழ்வாதாரச் செலவு 16,690 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில், ஏப்ரல்

Local News, News

டிட்வா சூறாவளி பாதித்த மக்களுக்கு கூடுதல் நிவாரணம்: ஜனாதிபதியின் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வலுவூட்டல் திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த முக்கிய முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 டிசம்பர் 05 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வலுவூட்டல் திட்டம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டபோது பல சவால்கள் அடையாளம்

Local News, News

நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் தடுப்புக்கு கோடிக்கணக்கில் செலவிடும் அரசு

இலங்கையில் வெறிநாய்க்கடி (ரேபிஸ்) நோய் பரவலைத் தடுப்பதற்கும், நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்கலுக்கும் அரசாங்கம் ஆண்டுதோறும் 5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை செலவிடுவதாக சுகாதார அமைச்சின் வெறிநாய்க்கடி ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிரோஷன் கமகே தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையில் ஒவ்வொரு 8 பேருக்கும் ஒரு நாய் என்ற விகிதத்தில் நாய் சனத்தொகை காணப்படுவதாகவும், நாட்டில் வீட்டு மற்றும் தெரு நாய்கள் சேர்த்து 27 முதல்

Local News, News

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள்

தமிழர்களின் அறிவு மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1981 ஆம் ஆண்டு ஜூன் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில், ஆசியாவின் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 97 ஆயிரத்திற்கும் அதிகமான அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள், பழமையான கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க அறிவுச் செல்வங்கள் அழிந்தன. யாழ்ப்பாணம் பொது

Local News, News

நாடளாவிய ரீதியில் 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் அறிகுறி; பெரும்பாலானோர் மாணவர்கள்

நாடளாவிய ரீதியில் இதுவரை 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவாகியுள்ள நோயாளர்களில் பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்றினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் இருப்பதாக நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தெனியாய, ரிகில்லகஸ்கட, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளிலிருந்தே அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (31) வரையிலான நிலவரப்படி,

Local News, News

இன்று வானில் அரிய ‘நீல நிலவு’ தோற்றம்; பொதுமக்களுக்கு பார்வையிட வாய்ப்பு

பல ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றவுள்ள ‘நீல நிலவு’ (Blue Moon) எனப்படும் அரிய வானியல் நிகழ்வை இன்று (31) இரவு பொதுமக்கள் பார்வையிட முடியும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நிகழ்வு பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது சில சந்தர்ப்பங்களில் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அரிய வானியல் சம்பவமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நீல நிலவு’ என்ற பெயர் இருந்தாலும், சந்திரன்

Local News, News

செப்டம்பருடன் தற்காலிக நிவாரணங்கள் நிறுத்தம்; IMF-க்கு ஜனாதிபதி அநுர உறுதி

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கும் நிதி 100 பில்லியன் ரூபாவிற்குள் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துக்கு (IMF) உறுதியளித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், தற்போது வழங்கப்படும் அனைத்து தற்காலிக நிவாரணங்களும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நிறுத்தப்படும் என்றும், நாட்டின் நிதி

Local News, News

இன்று நள்ளிரவு முதல் அமுல்: அனைத்து முக்கிய எரிபொருட்களின் விலையும் உயர்வு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை லிட்டருக்கு 407 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு, லிட்டரொன்றின் புதிய விலை 478 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அது லிட்டருக்கு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

Local News, News

நீதிமன்ற அனுமதியுடன் கைதி ஜெயக்குமாரின் உடல் அரச செலவில் அடக்கம்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றுள்ளன. யாழ்ப்பாணம் கோம்பையன் இந்து மயானத்தில் அவரது உடல் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ். பிரணவன் உறுதிப்படுத்தியுள்ளார். வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் உறுதி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து தீர்ப்பை அறிவிப்பதற்காக மரண தண்டனை கைதிகள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து

Scroll to Top