Search Results for: 35

Here are the search results for your search.

News, World News

ஈ. ஜீன் கேரொல் வழக்கு: ட்ரம்ப்பின் மறுபரிசீலனை மனுவை மீண்டும் நிராகரித்த அமெரிக்க உயர் நீதிமன்றம்

எழுத்தாளர் ஈ. ஜீன் கேரொலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு வழங்க உத்தரவிட்ட சிவில் வழக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீட்டை மீண்டும் பரிசீலிக்கக் கோரிய மனுவை அமெரிக்க உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கேரொல் வழக்கில் ட்ரம்ப்புக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை பரிசீலிக்க அமெரிக்க உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் மறுத்திருந்தது. இதையடுத்து, அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ட்ரம்ப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், நீதிமன்றம் எந்தவொரு […]

News, Uncategorized

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளதுடன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக, 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் நீதித்துறை தொடர்பான ஏற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்வதுடன், நீதித்துறை அமைப்பு சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்

Astrology, News

வார ராசி பலன் ஜூலை 20 முதல் 26, 2026

இந்த வாரத்தில் ஜூலை 24 ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். மேலும் மிதுனத்தில் புதன் ஆட்சி பெற்று இருப்பதால் பத்ர யோகம் உருவாகிறது. கடத்தில் சூரியனும், குருவும் சேர்ந்தும், சிம்மத்தில் சுக்கிரன், கேது கிரகங்கள் சேர்ந்து சஞ்சாரம் செய்து வருகின்றனர். கிரகங்களின் பெயர்ச்சிகளால் 12 ராசிகளுக்கு எப்பட்டிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம். ஜூலை 20 முதல் 26 வரையிலான இந்த வார காலத்தில் புதன், சந்திர கிரகங்களின் நகர்வுகள் நடக்கின்றன. ஜூலை

Astrology, News

இன்றைய ராசி பலன் 16 ஜூலை 2026

இன்று 16 ஜூலை 2026 வியாழன் கிழமை, பராபவ வருடம், ஆனி மாதம் 31ம் தேதி கடக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் சூரியன், புதன் சேர்க்கையால் புத ஆதித்ய யோகமும், கடகத்தில் குரு உச்சம், சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோக பலனும் கிடைக்கிறது. இன்று தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஜூலை 16, 2026 ஆனி மாதம் 31ம்

Astrology, News

இன்றைய ராசி பலன் 14 ஜூலை 2026

இன்று 14 ஜூலை 2026 செவ்வாய்க்கிழமை பராபவ வருடம், ஆனி மாதம் 30ம் தேதி மிதுன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று முன்னோர் வழிபாடு செய்ய வேண்டிய நாள். இன்று மிதுனத்தில் சூரியன், சந்திரன், புதன் ஆகிய மூன்று கிரக சேர்க்கை நடக்கிறது. கடகத்தில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இன்று திரிகிரகி யோகம். இன்று விருச்சிக ராசியில் உள்ள அனுஷம், கேட்டை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று

Cinema, News

இயக்குநரிலிருந்து நடிகராக ஜேசன் சஞ்சய்? திரையுலகில் புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளதாக தகவல்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில், அடுத்த கட்டமாக நடிகராகவும் திரையுலகில் பயணிக்கத் தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தந்தை விஜய்யின் பாதையைப் பின்பற்றி, ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகும் வாய்ப்பு குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஜேசன் சஞ்சய் நடிக்க ஏற்ற கதைகளைத் தேர்வு செய்யும் பணியில் லைகா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாகுவது தொடர்பாக

News, World News

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் தாக்கத்தால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்வை பதிவு செய்து வருகின்றன. சமீபத்திய சந்தை நிலவரத்தின்படி, Brent ரக மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 86.91 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 80.48 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக,

Local News, News

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: 200 பேரிடம் வாக்குமூலம்; ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசேட விசாரணை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்ளிட்ட சுமார் 200 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய விசேட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன்,

Local News, News

பரீட்சைக்குப் பிறகு ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது மாணவர் காணாமல் போனார் – தீவிர தேடுதல் நடவடிக்கை

லிந்துலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்றபோது காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள், ஓல்ரிம் பகுதியில் உள்ள கொத்மலை ஆற்றுக்கு நீராடச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. நீராடிக் கொண்டிருந்தபோது, 9 மாணவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில்,

News, Uncategorized

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த புதிய ஆயுர்வேத மருந்துகள் அறிமுகம்

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் டெங்கு நோயாளர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் வகையில் இந்த மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் கொன்தசிங்க தெரிவித்துள்ளார். மேலும், மேல் மாகாண ஆயுர்வேத திணைக்களம் புதிய ஆயுர்வேத மருந்தொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அதனை மேல் மாகாணத்திலுள்ள வீடுகளுக்கு விநியோகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top