Search Results for: 3

Here are the search results for your search.

News, World News

ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைத்தால் உலகம் பேரழிவைச் சந்திக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்பட்டால் உலகம் கடுமையான பேரழிவை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ‘Fox Business’ ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். ஈரானுடன் தொடர்புடைய மோதல் நிலை முடிவுக்கு வந்ததும், சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகளும் மின்சாரக் கட்டணங்களும் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் எனவும் அவர் கூறினார். தற்போதைய பதற்றமான சூழ்நிலை தணிந்த பின், அமெரிக்காவையும் உலக பொருளாதாரத்தையும் சாதகமாக பாதிக்கும் மாற்றங்கள் […]

Local News, News

வெளிநாடொன்றில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரி மீது விமானி கடுமையான தாக்குதல்

தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி மற்றும் ஒரு விமானி இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்துக்கான நிறுவன பொறுப்பதிகாரியான அமிதாப் அந்தனிபிள்ளை மற்றும் UL403 விமானத்தின் விமானி ஆகியோருக்கிடையே இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட விமானத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் போது ஏற்பட்ட வாய்த்தகராறு கடுமையான மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதன்போது விமானி

News, World News

சர்வதேச சந்தையில் தங்க விலை உயர்வு

சர்வதேச சந்தையில், இன்றையதினம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,766.53 டொலர்களாக விற்பனையாகின்றது. அதேநேரம், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 76.25 டொலர்களாக விற்பனையாகின்றது. இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஆரம்பித்துள்ளன. இதனால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளமை இந்த விலை மாற்றத்திற்கு காரணமாக

News, Uncategorized

கண்டி, கேகாலை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (13) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு முதலாம் கட்ட ‘கவனம் செலுத்துக’ (Level 1 – Watch) எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   உயர்

Astrology, News

பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு சுப நேரங்கள்

புது வருடம் பிறக்கும் நேரம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி 32 நிமிடத்துக்கு உதயமாகின்றது. விஷு புண்ணிய காலம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.32 மணி முதல் அன்று பிற்பகல் 1.32 மணி வரை புது வருட புத்தாடை சிவப்பு அல்லது வெள்ளை நிறப் பட்டாடை கை விஷேடம் மற்றும் புதுக்கணக்கு, வியாபாரம் தொடங்கல் 15.04.2026 – புதன் முற்பகல் 9.32 மணி முதல் 10.02 மணி வரை அடுப்பு மூட்டுதல் 14.04.2026 – செவ்வாய் – பிற்பகல்

News, World News

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நெருக்கடி தீவிரம்: டீசல் விலை உயர்வால் போக்குவரத்துத் துறை திணறல்

ஈரான் போர் காரணமாக உலகளவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மசகு எண்ணெய் விலை உச்சத்தை எட்டிய நிலையில், அவுஸ்திரேலியா கடுமையான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நீண்டதூரப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் ‘ரோட் ட்ரெயின்கள்’ எனப்படும் பெரிய பாரவூர்திகள், டீசல் விலை அதிகரிப்பால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன. போருக்கு முன்பு ஒரு லிட்டர் டீசல் 180.2 சென்ட் இருந்த நிலையில், தற்போது அது 312.7 சென்ட்டாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையும் 171 சென்ட்டில் இருந்து 240.1 சென்ட்டாக அதிகரித்துள்ளது.

News, World News

அந்தாடிக்காவின் “ஆபத்தான வலயத்தில்” புதிதாக கண்டறியப்பட்ட மர்மத் தீவு!

அந்தார்டிக்காவின் வடமேற்கு வெடெல் கடல் பகுதியில், எகிப்தின் கிசா பிரமிடு அளவுக்கு ஒப்பிடத்தக்க புதிய தீவு ஒன்றை சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. ‘போலார்ஸ்டெர்ன்’ எனப்படும் பனிக்கப்பலில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் ஆய்வில் ஈடுபட்டிருந்த 93 பேர் கொண்ட குழுவினர், கடும் புயல் காரணமாக ஒரு பகுதியில் தற்காலிகமாக தஞ்சமடைந்தபோது இந்த நிலப்பரப்பைக் கவனித்தனர். முதலில், இது ஒரு “அழுக்கடைந்த பனிப்பாறை” (Dirty Iceberg) என தவறாக கருதப்பட்டது. ஆனால் பின்னர் ட்ரோன் ஆய்வுகள்

Cinema, News

பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (Asha Bhosle) தனது 92ஆவது வயதில் காலமானார்.உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திடீர் மாரடைப்பு காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (Asha Bhosle) தனது 92ஆவது வயதில் காலமானார்.உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திடீர்

News, Uncategorized

அமெரிக்காவைத் தொடர்ந்து ஈரானியத் தூதுக்குழுவும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றம்

இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்துள்ள நிலையில், ஈரானியத் தூதுக்குழுவும் பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Baqer Qalibaf) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) ஆகியோர் அடங்கிய உயர்மட்டத் தூதுக்குழு பாகிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளதாக ‘மெஹர்’ (Mehr) செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, வாஷிங்டனின் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டு, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.

Scroll to Top