
இஸ்ரேலும் லெபனானும் இடையே அமெரிக்கா ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த நிபந்தனைகளை லெபனானின் ஆயுதமேந்திய ஹிஸ்புல்லா இயக்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற இந்த அமைப்பின் தலைவர் நயீம் காசிம் (Naim Qassem) வெளியிட்ட அறிக்கையில், இந்த பேச்சுவார்த்தைகள் லெபனானுக்கு “வீணானவை” மற்றும் “அவமானகரமானவை” என தெரிவித்துள்ளார். மேலும், இது லெபனான் மக்களின் பரந்த ஆதரவையும் பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலும் லெபனானும் தங்களின் பலவீனமான போர்நிறுத்தத்தைப் புதுப்பிப்பதற்காக பாதுகாப்பு வலையங்களை உருவாக்குவது குறித்து அறிவித்துள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட கூட்டு அறிக்கையில், இந்த ஒப்பந்தம் ஹிஸ்புல்லாவின் முழுமையான ஆயுத நிறுத்தத்தையே அடிப்படையாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிலைமை குறித்து கருத்து தெரிவித்த நயீம் காசிம், இது ஒரு தற்காலிக போர்நிறுத்தமாக இருந்தால் கூட, தொடர்ச்சியான தாக்குதல்கள் அதை அர்த்தமற்றதாக்குவதாகக் கூறினார்.
“இது அமைதி ஒப்பந்தம் அல்ல; சரணடைதல் போன்ற ஒரு நிலை” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிராந்தியத்தில் நீடிக்கும் பதற்றம் காரணமாக பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை நிலவுவதாகவும், லெபனானில் பலர் இது புதிய நிலைமையல்ல என கருத்து தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
