July 2026

Local News, News

முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு

முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட தகவல்களின்படி, அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து அவர் உடனடியாக முல்லேரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்து வருகிறது.

Astrology, News

இன்றைய ராசி பலன் 16 ஜூலை 2026

இன்று 16 ஜூலை 2026 வியாழன் கிழமை, பராபவ வருடம், ஆனி மாதம் 31ம் தேதி கடக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் சூரியன், புதன் சேர்க்கையால் புத ஆதித்ய யோகமும், கடகத்தில் குரு உச்சம், சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோக பலனும் கிடைக்கிறது. இன்று தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஜூலை 16, 2026 ஆனி மாதம் 31ம்

News, World News

அமெரிக்கா தாக்கினால் செங்கடல் முடக்கப்படுமா? ஹூதிகளுக்கு ஈரான் ரகசிய அறிவுறுத்தல் என தகவல்

அமெரிக்கா, ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், செங்கடல் வழியாக நடைபெறும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தைத் தடுக்கத் தயாராக இருக்குமாறு ஏமனின் ஹூதி அமைப்புக்கு ஈரான் அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஈரானின் உயர்மட்ட தலைமைத்துவத்தில் விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றதாகவும் அந்தத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான அறிவுறுத்தல்கள், ஈரானுடன் நெருங்கிய தொடர்புடைய ஹூதி அமைப்புக்கு ஏற்கனவே

News, World News

வெனிசுவேலா இரட்டை நிலநடுக்கம்: உயிரிழப்பு 4,829 ஆக உயர்வு – மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய தகவல்களின்படி, இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 16,740 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, நிலநடுக்கத்தின் காரணமாக 17,907 பேர் தங்களது வீடுகளை முழுமையாக இழந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Local News, News

கனடா, லக்சம்பர்க் வேலைவாய்ப்பு மோசடி: ரூ.8 மில்லியன் பெற்றதாக சந்தேகநபர் கைது

கனடா மற்றும் லக்சம்பர்க் நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, ஐந்து பேரிடம் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாய் மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் (14) வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவையைச் சேர்ந்த 38 வயதுடைய ஃபைஸ் முகமது நஃப்திகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புலனாய்வுகளின்படி, யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கனடா மற்றும் லக்சம்பர்க் நாடுகளில்

News, Uncategorized

டெங்கு பரவல் தீவிரம்: இந்த ஆண்டில் 72,430 பேர் பாதிப்பு – 49 உயிரிழப்புகள்

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 72,430 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (15) ஒரே நாளில் மட்டும் 1,195 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களிலேயே 17,051 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண வாரியான தரவுகளின்படி, அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 38,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் மாகாணத்தில் 11,274 பேரும்,

Local News, News

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு மனு: ஜூலை 23ஆம் தேதி நீதிமன்றத் தீர்மானம்

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஜூலை 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பும் சட்ட மா அதிபர் தரப்பும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதிமன்றம், மனுவை முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான

Local News, News

நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவுக்கு பசுமை எரிசக்தி மேம்பாட்டு திட்டம்– அரசின் புதிய நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் உள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றை ‘பசுமை சக்தித் தீவுகள்’ (Green Energy Islands) ஆக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். தற்போது இந்த மூன்று தீவுகளிலும் நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy System – HRES) திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, பசுமை எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரிவுபடுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எரிசக்தி அமைச்சின்

Local News, News

டெங்கு அதிகரிப்பு எதிரொலி; தாதியர்களின் சேவைக் காலம் நீட்டிக்க கோரிக்கை

நாட்டில் நிலவி வரும் கடுமையான தாதியர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், ஓய்வு பெறவுள்ள தாதியர்களின் சேவைக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நேற்று (14) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாகவும், வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் கணக்கில்

Local News, News

புகையிலை கலந்த வெற்றிலை விற்பனைக்கு கடும் நடவடிக்கை; நாடளாவிய கண்காணிப்பு தீவிரம்

இலங்கையில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையின் விற்பனையை முற்றாகத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பதிவாகும் புற்றுநோய்களில் வாய் புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதால், அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத் தெரிவித்துள்ளார். புகையிலை கலந்த வெற்றிலையை பயன்படுத்துவது வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக

Scroll to Top