
நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் தடுப்புக்கு கோடிக்கணக்கில் செலவிடும் அரசு
இலங்கையில் வெறிநாய்க்கடி (ரேபிஸ்) நோய் பரவலைத் தடுப்பதற்கும், நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்கலுக்கும் அரசாங்கம் ஆண்டுதோறும் 5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை செலவிடுவதாக சுகாதார அமைச்சின் வெறிநாய்க்கடி ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிரோஷன் கமகே தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையில் ஒவ்வொரு 8 பேருக்கும் ஒரு நாய் என்ற விகிதத்தில் நாய் சனத்தொகை காணப்படுவதாகவும், நாட்டில் வீட்டு மற்றும் தெரு நாய்கள் சேர்த்து 27 முதல் […]





